அந்தப் பெண் செல்போனில் பேசியபடியே
பஸ் ஏறினாள்.இடம் கிடைத்தது உட்கார்ந்தாள்.
பேசிக் கொண்டே சில்லறை நீட்டி டிக்கெட்
வாங்கினாள்.பேசிக் கொண்டே தானிருந்தாள்.
பயணிகள் அவளையே உற்றுப் பார்த்தார்கள்.
அவள் யாரையும் பார்க்கவில்லை. பேசும்
சத்தம் கூட பக்கத்திலிருப்பவர்க்கு
கேட்காதவாறு மெல்லிய குரலில் பேசினாள்.
அவள் அப்படியென்ன தான் பேசுகிறாள்
என்று வெறுப்பு உணர்ச்சியோடு பாக்கிறார்கள்.
பஸ் நிறுத்தம் ஓன்றில் பேசிக் கொண்டே
இறங்கினாள். பேசிக் கொண்டே பாதையில்
நடந்துப் போகிறாள்.எங்கோ இன்னும் பேசிக்
கொண்டேதான் போய்க் கொண்டிருப்பாளோ?
இரகசியமானப் பேச்சு
மறைக்காது வெறுக்காது
கேட்கிறது பொறுமையாய் காது.
No comments:
Post a Comment