Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Saturday 31 January 2015

கட்டெறும்பு...!! [ கவிதை ]


*
ஊ…ஊ… என்று பயந்துக்
கத்தினான் குழந்தை.
வெளியில் போய் பார்த்தேன்.
மெதுவாகப்
போய்க் கொண்டிருந்தது
கட்டெறும்புகள்…!!
*


Friday 30 January 2015

பிரிவு....!! [ கவிதை ]

*
அவர் வடமாநிலத்திலிருந்து
தென்மாநிலம் வரும்
சரக்கு லாரி ஓட்டுநர்.
இரவு உணவுக்காகப்
பாதையோரமாய்
வண்டியை நிறுத்தி
இறங்கினார்.
செல்போனில்
அவர் இந்தியில்
என்ன பேசுகிறார்? என்று
புரியவில்லை.
குழந்தைகள், மனைவி பற்றி
நலம் விசாரிக்கிறார் என்று
பக்கத்திலிருந்தவர்
தமிழில் சொன்னார்.
அனுதாபம் மேலிட்டது.
பயணம் தொலைதூரம்.
பிரிவு பெரும் துயரம்
*

Thursday 29 January 2015

ந.க. துறைவன் ஹைக்கூ கவிதைகள்.


N.G. THURAIVAN’S HAIKU.
TAMIL / ENGLISH.
*
கர்ப்பக்கிரகத்துள் மூலவர்
சுவரிலோ
சி்ற்பியின் பாலியல்.
Sanctum sanctorum-
At the corridors,
Sex appeats of the sculptor!
*
தனிமை நிலவு
வீதியில் காவல்
நடுநிசி நாய்கள்.
Solitary moon
to guard the streets
midnight dogs.
*
அண்மைக் காலமாய்
அருகிப் போனது
சிரிப்பின் அற்புத கணப்பொழுது.
Nowadays – the pleasant
moments of laughter
becoming almost a rarity!.
*
நிரம்பி வழியும் ஏரி
துணிச்சலான சவாரி
சருகு இலைப் படகுகள்.
Lake overflows….
on expedition, the boats,
with withered leaves!.
*
சாபமா கோபமா
வானம் பார்த்த பூமியில்
பொழிவதில்லை மேகம்.
Fury or a curse?
Clouds, heedless
Of the drought – prone soil!.
*
சஞ்சல மனத்திற்கு
சஞ்சீவி மருந்து
மோன மௌனம்.  
A panacea
For a waverly mind
Silent composure.
*
மடியில் உறங்கும் குழந்தை
அம்மாவின் வயிற்றில் துள்ளும்
இன்னொரு குழந்தை.
On mother”s lap
a child asleep whilst
a foetus nudging at womb!
தமிழ் : ந.க. துறைவன்
Tamil : N.G. THUAIVAN.  
ஆங்கிலம் : கவிஞர். அமரன்.
Eng .Translated by : Kavingzhar. AMARAN. 
நன்றி :- “ மகாகவி ” – டிசம்பர்- 2014. இதழில்
வெளிவந்துள்ளது.

*

சேடிஸ்ட்...!! [ கவிதை ]


*
மற்றவர்களை ஏமாற்றி வந்தவன்
வேறொருவனிடம்  ஏமாறினான்.
*
ஒரு சேடிஸ்டை இன்னொரு
சேடிஸ்டே அறிவான்.
*
மற்றவர்க்கு கிடைத்தால் பொருமுகிறான்
தனக்குக் கிடைத்தால் சந்தோஷப்படுகிறான்.

*

Wednesday 28 January 2015

கால தாமதமாய்...!! [ புதுக் கவிதை ]


*
காத்திருக்கும்போது
எதிர்ப்பார்க்கும்
பேரூந்து வரவில்லை
வருமென்ற நம்பிக்கை
பயணிகளுக்கு இல்லை.
அப்பொழுது வேகமாய் வந்த
இன்னொரு பேரூந்தில்
அனைவரும் ஏறினார்கள்.
பேரூந்துப் புறப்பட்டு விட்டது.
சில நொடிகளில்
பின்னாலேயே வருகிறது
எதிர்ப்பார்த்துக்
காத்திருந்தப் பேரூந்து
கால தாமதமாய்….!!

*

கால தாமாமாய்....!! [ புதுக் கவிதை ]

கால தாமதமாய்…!!
*
காத்திருக்கும்போது
எதிர்ப்பார்க்கும்
பேரூந்து வரவில்லை
வருமென்ற நம்பிக்கை
பயணிகளுக்கு இல்லை.
அப்பொழுது வேகமாய் வந்த
இன்னொரு பேரூந்தில்
அனைவரும் ஏறினார்கள்.
பேரூந்துப் புறப்பட்டு விட்டது.
சில நொடிகளில்
பின்னாலேயே வருகிறது
எதிர்ப்பார்த்துக்
காத்திருந்தப் பேரூந்து
கால தாமதமாய்….!!

*

Tuesday 27 January 2015

குணமறிந்து...!! [ ஹைக் கூ]

*
N,G. THURAIVAN'S HAIKU.

கோள் சொல்லத் தெரியாது
அவமானப்படுத்தத் தெரியாது
அமைதியான சிட்டுக் குருவிகள்
*
வழி தவறிப் போகிறதென்று
விசனப்பட்டான்.
சரியாகப் பறக்கின்றன பறவைகள்.
*
அறிவுரைச் சொல்வதற்கும்
நேர்மையான மனம் தேவை
எந்தப் புற்றில் நல்ல பாம்பு?

*

சந்தோஷ அருவிகள்...!!


*
செடிகளின் மீது வந்து
அமர்ந்தக் குருவிகளை
விரட்டிட மனமில்லாமல்
வேடிக்கைப் பார்த்து
நின்றான் குட்டிப் பையன்.
குருவிகள் அவனைப் பார்த்து
குதித்துத் தாவி பறக்கிறது.
அவன் கைத் தட்டிச் சிரிக்கிறான்.
மீண்டும் அவனருகே வந்து
விளையாடுகிறது.
அம்மாவை அழைத்துக்
காட்டுகிறான்.
அவன் மனமெல்லாம்
குருவிகள்
சந்தோஷ அருவிகள்.

வாடியது பூ...!! [ கவிதை ]


*
பூச் செடிகளை வளர்த்து
வீட்டின் முன்புற வெளியை
அழகுப் படுத்திப் பார்க்கிறவன்
அடுத்த வீட்டுக் குழந்தைப்
பூ ஒன்றைப் பறித்ததற்காக
சுடுச் சொல்லால்
காயப் படுத்தினான்இ
பூ வாடியது
குழந்தை உள்ளே ஓடியது….!!

*

அனுசரிப்பு...!! [ ஹைபுன் ]

*
N.G. THURAIVAN'S HAIBUN. 
*
திருமணமானப் பெண்கள், கணவனுடன் எப்பொழுதேனும் சந்தோஷமாக மனம் விட்டுப் பேசும்போது, அடிக்கடி அம்மா வீட்டின் வசதி வாய்ப்புகள், அங்கு எப்படியெல்லாம் நடப்பார்கள். பேசிப் பழகுவார்கள் என்று பெருமையோடுப் பேசித் தீர்ப்பாள். அவ்வாறு பேசுவதை எல்லா கணவன்மார்களும் கேட்டுக் கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. சில பேருக்குப் பிடிக்கும். சில பேருக்குப் பிடிக்காது. சில பேர்களிடையே சண்டைச் சச்சரவும் ஏற்பட்டு விடுவதுண்டு. இத் தற்பெருமையினால் விவாகரத்துமானதுண்டு. தற்கொலை வரைப்  போய் வாழ்வே
முடிந்துக் கொண்டப் பெண்களும் உண்டு.          
அனுசரிப்பில்லாத இருமனங்கள்
சட்டெனப் பற்றி விடுகிறது
வார்த்தை நெருப்புப் பொறி.
*

Saturday 24 January 2015

மனங்குறுகி...!! [ கவிதை ]

*
மன்னிப்புக் கேள் என்பவன் மகாகர்வி
மன்னிப்புக் கேட்டவன்  நின்றான் மனங்குறுகி.
*
வாய் பேசாமல் வேலை செய்கிறவனை
வார்த்தையால் காயப்படுத்துகிறார்கள்.

*

Friday 23 January 2015

சுண்டெலி....!! [ சென்ரியு ]

N.G. THURAIVAN'S SENRYU.
*
தொப்பை விநாயகரைச்
சிரித்துக் கொண்டே
சுமந்துப் போகிறது சுண்டெலி.
*
பேசிக் கொள்ளாதப் பக்கத்து வீட்டுக்கார்கள்
பொங்கல் வாழ்த்துக்கள் - என்று
தெருவில் போட்டார்கள் கலர்கோலம்.
*
வெண்புகைப் படலம் எங்கும்
கடுமையான பனி
வெளிவரவில்லைப் பறவைகள்

*

Thursday 22 January 2015

மீன்கள்....!! [ ஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU,
*
மீனின் இதயத்தைக்
குத்திக் கொல்கின்றது
தூண்டில் கொக்கியின் நுனி.
*
தூண்டில்காரனை ஏமாற்றி விட்டு
துள்ளி குதித்துத்
தப்பித்துப் போகின்றன மீன்கள்.
*
வயது என்னவாக இருக்கும்?
வெட்டுப்பட்டுப் கொண்டிருக்கும்
வலிமையான பெரிய மீன்.
*

தந்திக் கவிதை....!!

*
பொம்மைகள்.
*
பார்க்காதே
கேட்காதே
பேசாதே.
*

Wednesday 21 January 2015

நடைப் பயிற்சி...!! [ கவிதை ]

*
N.G. THURAIVAN'S SENRYU,
*
பயமா என்ன?
உருகி மறைகின்றான்
சூரியனைக் கண்ட பனி.
*
இதமான காலைக் காற்று
புல்வெளி, குளிர்ப் பனி
நடைபயிற்சியில் நாய்கள்.
*
அஞசறைப் பெட்டியில்
அடங்கியிருக்கின்றது
நாட்டு வைத்தியம்.
*

காத்திருப்பு...!! [ கவிதை ]


*
காத்திருக்கும் போது
யாரும் சீக்கிரம்
வருவதில்லை
வெளியே
போய்விட்டப் பின் வந்துக்
காத்திருக்கிறார்கள்.
* .


தாய் மனம்...!! [ கவிதை ]

*
தறுதலையாய்ச் சுற்றித்
திரிந்த மகன்
திருந்தவேயில்லை என்று
கடைசி வரை
வருந்தினாள் தாய்….!! .
*

அசைவு...!! [ ஹைக்கூ ]

*
மரங்களின் அசைவாய்
மனமெங்கோ அலைகிறது
இரவு நேரம்.
*

Tuesday 20 January 2015

பென்குவின்....!! [ ஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU. 
*
காண்போர் இல்லாத இடத்தில்
ஆனந்த நடனமாடி மகிழ்கின்றது
பென்குவின் பறவைகள்.
*
பாதையில் போகிறது நரி
புதரில் ஒளிந்துப் பார்க்கிறது
அறிவாளி முயல்.
*

Sunday 18 January 2015

வெளிப்படையாக...!! [ கவிதை ]

வெளிப்படையாக…!!
*
வெளிப்படுத்தாமலேயே சிலர்
வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
*
புதுசு புதுசாகத் தேடுகிறது
சலித்திடும் மனம்.
*
கண்களால் வாங்கியது லட்சம் புத்தகம்
காசு கொடுத்து வாங்கியது பத்து புத்தகம்.

*

Friday 16 January 2015

போதை....!! [ கவிதை ]

*
உன்னை
பேதைப் பெண்ணென்று
எனக்கு
அறிமுகப்படுத்தினார்கள்.
நீயோ பேதையல்ல
எனக்கு

போதை கொடுத்த மது.
*

Thursday 15 January 2015

மஞ்சள் வெயில்....!! [ ஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU..
*
எந்த விபத்தும் நடக்கவில்லை
சூரியன் வாரி இறைக்கிறான்
மாலை மஞ்சள் வெயில்.
*
பளபளப்பான மென்மை உணர்கிறான்
கைகவிரல்களில் கனவு
வண்ணத்துப் பூச்சியின் இறகு.
*

நல்வாழ்த்துக்கள்...!!

*
GOOD MORNING FRIEND’S
மாட்டுப் பொங்கல் நாள்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நண்பர்களே..
அன்பு காலை வணக்கம்
வாழ்க வளமுடன்…

*

நூல் அறிமுகம்...!!

*
ந.க. துறைவனின் “ தவளை குதித்த குளம் ”
ஹைக்கூ கவிதை நூல் வெளிவந்து விட்டது.
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஸ்டால்

எண் 419 – ல் விற்பனைக்கு கிடைக்கின்றன.  
*

Wednesday 14 January 2015

நல்வாழ்த்துக்கள்...!!

*
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
எனது அன்பான பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்…

*

Sunday 11 January 2015

சென்னை புத்தகக் கண்காட்சி...!!

*
சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன்.
கூட்டமோ கூட்டம். புத்தகம் நோட்டமிடும் கூட்டம்.
கண்களால் வாங்கியது லட்சம் புத்தகம்
காசு கொடுத்து வாங்கியது பத்துப் புத்தகம்.
எழுத்தாளர் நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன்.
மாலை வீடு திரும்பினேன்.

*

அணைந்தச“ சுடர்...!! [ கவிதை ]


*
குடும்பத்திற்கு
விளக்கேற்ற வந்தக்
குலமகள் என்று
உன்னை
வரவேற்று புகழ்ந்தார்கள்.
என்ன விவகாரத்திற்காக?
உன்
உயிர்ச் சுடரை
அணைத்து விட்டார்கள்?
*

Tuesday 6 January 2015

கோமாளி பொம்மை ...!! [ ஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU.
*
கீழே உதிர்ந்துக் கிடந்தது
கிளிகள் கொத்தி கொத்தி
எச்சில் படுத்திய இலந்தம்பழம்.
*
கோமாளி பொம்மை மேல்
எச்சமிட்டு பறக்கிறது
ரசிக்கத் தெரியாத காக்கை.
*
மனிதர்களை வேடிக்கைப் பார்க்கவா?
ஊருக்குள் வருகின்றன
காட்டு யானைகள்.
*

அஃக் மார்க்...!! [ கவிதை ]


*
நீ என்னை
மதிப்பீடு செய்தாய்.
நான் உன்னை
மதிப்பீடு செய்தேன்.
இருவரும் இணைவதற்கு
அம்மதிப்பீட்டு
மார்க் தான்
நம் காதலுக்கான
அஃக் மார்க்கோ….?

*

Monday 5 January 2015

ஏமாற்றம்...!! [ கஜல் ]


*
உன்
சொல் உரைக் கேட்டு
ஏமாந்தவன்
இன்று
கல்லறையில்
உறங்குகிறான்
ஏமாற்றாதப் பறவைகள்
அஞ்சலி செய்கின்றன.

*

Sunday 4 January 2015

வெள்ளை ரத்தம்...!! [ கவிதை ]


*
நாள்காட்டியில் உதிர்ந்தன இறுதி நாள்
புதியதாய் துளிர்க்கின்றன இலைகள்
*
மலைகளைக் குடைந்து விட்டார்கள்
அழிந்து வருகின்றன புராதனச் சின்னங்கள்.
*
வெள்ளை ரத்தம் கொட்டியது
கிள்ளியவுடன் எருக்கஞ்செடி.
*

Saturday 3 January 2015

கிறுக்கன்...!! [ ஹைக்கூ ]

*
N.G. THURAIVAN'S HAIKU. 
*
கண்ணாடிப் பெட்டிக்குள்
நீர்க் காற்றில்
அசைவற்ற பூச்செடிகள்.
*
சுவையான அப்பம்
சூழ்ந்து தின்கின்றன மீன்கள்
குளத்தில் நிலா.
*
பேண்ட் சர்ட் அணிந்த கிறுக்கன்
வயற்காட்டில்
காவல் பொம்மை.

*

Friday 2 January 2015

நோக்கு...!! [ கஜல் ]


*
கோயிலுக்குள்
எதிர்எதிர் வரிசையில்
நின்றிருந்தோம்.
நீ என்னை நோக்கினாய்
நான் உன்னை நோக்கினேன்
நம்மிருவரையும்
சிரித்துக் கொண்டே
நோக்கினார் கடவுள்.

*