அனல் வெயில்
மரத்தில் ஒரு
அணில் கூட
விளையாடுவதைப்
பார்க்க முடியவில்லை.
மரத்தில் மறைந்தது
என் மனம்.
ந க துறைவன்.
வெயில் காலம்
அனல் வெயில்
மரத்தில் ஒரு
அணில் கூட
விளையாடுவதைப்
பார்க்க முடியவில்லை.
மரத்தில் மறைந்தது
என் மனம்.
ந க துறைவன்.
வெயில் காலம்
குளிர் புங்கை மரநிழல்
படுத்திருந்தது எருமை
இடம் தேடி நாய்கள் போட்டி.
ந க துறைவன்.
கோடை வெம்மை
இசை பாடும் பறவை
உலகெங்கும் பறந்து
மூதாதையர்களை கூர்ந்து.
Singing bird
Fly around the world
Ancestors remembered.
Thuraivan NG
நினைவுகூர்ந்து
மல்லிகைப்பூ வாசம்
உதட்டில் புன்னகை
கையில் செல்பி ஆல்பம்.
Jasmine aroma
The smile on the lips
In the hands of selfie album.
Thuraivan NG
ந க துறைவன்.
கையில் செல்பி
ஹைக்கூ
பனி அகன்றது மெல்ல
வசந்த காலம் அரும்பியது
அழகியல் வேம்பு பூக்களோடு!
+
Snow went slowly
In the burgeoning spring
Beauty with neem flowers.
Thuraivan NG
பருவ காலம்
இன்று 18-03-218.
வசந்த நவராத்திரி ஆரம்பம்
மற்றும்
தெலுங்கு வருடப்பிறப்பு
நல்வாழ்த்துக்கள்.
ந க துறைவன்.
வாழ்த்துக்கள்
தரையில் உதிர்ந்த வேம்பூக்கள்
முகர்ந்து விலகியது நாய்
மழைநீரில் மிதந்தன மகிழ்ச்சியாய்.
ந க துறைவன்.
மழை நாளில்
எங்கிருந்து வருகிறது இசை?
திசைநோக்கி பறக்கும் பறவை
ஏகாந்த அண்டவெளி.
ந க துறைவன்.
எகாந்தம்.
முத்தத்தின் ஈரம் உதட்டில்
காய்வதற்குள் தேனீர் கொடுத்தாள்
கூடுதலாய் இனிப்பின் சுவை.
ந க துறைவன்.
இனிப்பின் சுவை
இலைகளற்ற மரம்
கம்பீரம் இழந்து
ஆடுகள் நிழல் தேடி.
ந க துறைவன்.
இலைகளற்ற மரம்
உதிர்ந்து கிடந்தது தரையில்
அவளுடைய சோக முகமாய்
வதங்கிய வாசமற்ற பூச்சரம்.
ந க துறைவன்.
வாசமற்ற பூ
நிழலுக்கு பார்வையில்லை
சூரியன் கண் பிரகாசிக்கிறது
வாத்துகள் குளிர்ந்த புல்வெளியில்.
ந க துறைவன்.
பார்வையற்ற நிழல்
வேலியின் நுனியில் ஓணான்
அருகில் தென்னை நிழல்
மேலே அசைகிறது கீற்று.
ந க துறைவன்.
வெளியில்.....
குளிர் காலம் விடைபெறுகிறது
வெப்ப நிலை மாற்றம்
இலை உதிர்காலமே வருக...
ந க துறைவன்.
பருவகா மாற்றம்
புள்ளதாச்சி பொண்ணு
விரும்பி கேட்கிறாள்
புளிப்பு மாங்காய்.
ந க துறைவன்.
ருசியாக..
முகர்ந்து பார்த்தது நெருங்கி
நாற்றமென்று உணர்ந்ததோ?
பசியில் அலைகிற நாய்.
ந க துறைவன்.
பசியில்...
முல்லா கதை
முல்லா நஸ்ருதீனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இருந்தது.
எனவே நீதிபதி அவனிடம், "முல்லா உனக்கு வயது என்ன?,
" நாற்பது " என்றான் அவன்.
உடனே நீதிபதி, "ஆனால் இது விநோதமாக உள்ளது. நீ என்னை ஆச்சரியமடையச் செய்கிறாய். ஏனெனில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நீ இதே நீதிமன்றத்திற்கு வந்தாய். அப்போது அந்த நேரத்திலும் நீ நாற்பது என்று தான் கூறினாய் " என்றார்.
அதற்கு முல்லா, "ஆம், நான் ஒரு கொள்கை மாறாத மனிதன். ஒருமுறை நான் ஏதாவது ஒன்றை கூறிவிட்டால், நீங்கள் என்னை நம்பலாம். நான் வேறு எதையும் கூறமாட்டேன்" என்றான்.
ஓஷோ
ரகசியமாய் ஒரு ரகசியம் - பாகம் - 2, பக்கம் - 163 - 164.
தகவல் : ந க துறைவன்.
முல்லா கதை