Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Tuesday 31 July 2018

பல்லி

குட்டி கதை

பல்லி

அரண்மனைப் பல்லி தர்பார் மண்டபத்தின் மேற்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும். அவ்வூரிலிருந்த சாதாரண பல்லிகள் இந்த அரண்மனைப் பல்லிக்கு மரியாதை கொடுத்துத் தங்கள் சமூக நிகழ்ச்சிகளுக்கு அழைக்கும். ஆனால் இது என்றும் போகாது. ஒரு முறை சில பல்லிகள் அது ஏன் அரண்மனையை விட்டு வெளியே வருவதே கிடையாது என்று கேட்டன. அதற்கு அரண்மனைப் பல்லி, " மடையர்களே! இது கூடவா தெரியாது? நான் தானே தர்பார் மண்டபத்தின் மேற்பகுதி முழுவதையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன். நான் வெளியேறினால் மேற்பகுதி விழுந்து மண்டபம் சிதறிப் போகாதா" என்று காட்டமாகக் கேட்டது.

ஆதாரம்: ஓஷோ - அஷ்டாவக்ர மகாகீதை - பக்கம்- 96-97.
தகவல் : ந க துறைவன்.


ஞானம்

யானை முகத்திற்குள்
மறைந்திருக்கிறது ரகசியம்
புத்தனின் ஞான முகம்.

ந க துறைவன்.


மறைஞானம்


Tuesday 24 July 2018

மகிழ்ச்சி

சிலர் மகிழ்ச்சியாக
இருக்கிறார்கள்
சிலர் மகிழ்ச்சியே
இல்லாமல் இருக்கிறார்கள்
மகிழ்ச்சி
மனதில் எப்போதுதான்
மலரும்?
*
மலரும் புன்சிரிப்பு
உல்லாச மனம்
மேனி அலங்காரம்
வெளி அழகு
உள்ளே எப்பொழுதும்
சோக மயம்.

ந க துறைவன்.


மகிழ்ச்சியாக இருத்தல்


Monday 23 July 2018

ஆடிமாதம்

வேப்பிலை ஆடைகள் கட்டி
பிரகாரம் வலம் வந்தாள்
அவள் மீது எத்தனை பார்வைகள்?
*
ஆடிமாதம்
அம்மன் மாதம்
என்பது போய்
ஆடைகள் மாதம்
என்றாக்கி விட்டார்கள்.

ந க துறைவன்.


ஆடிமாதம்


ஆடிமாதம்

வேப்பிலை ஆடைகள் கட்டி
பிரகாரம் வலம் வந்தாள்
அவள் மீது எத்தனை பார்வைகள்?
*
ஆடிமாதம்
அம்மன் மாதம்
என்பது போய்
ஆடைகள் மாதம்
என்றாக்கி விட்டார்கள்.

ந க துறைவன்.


ஆடிமாதம்


சிறகுகள்

காய்ந்த இலைகளுக்கு
சிறகு முளைக்கின்றன
பலத்த காற்றின் போது.
*
சருகு இலைகள்
எரித்து குளிர்க்காய்கிறான்
வழிப்போக்கன்.

ந க துறைவன்.


காற்றின் போது


Thursday 19 July 2018

சிறகுகள்

காய்ந்த இலைகளுக்கு
சிறகு முளைக்கின்றன
பலத்த காற்றின் போது.

ந க துறைவன்.


காற்றின் போது


Monday 9 July 2018

முற்றுபெறாமல்...!!

உனக்காக
காதல் கவிதை
செல்லில் எழுதி
குறுஞ்செய்தி
அனுப்பவும் நினைத்து
டைம் செய்யும் போதேதான்
அம்மாவின் அழைப்பு குரல்
" வாடா, ஒரு வேலை என்று..."
அப்பா, என்னைத் திட்டிவிட்டு
போகிறார்
வெளியில்
பூக்காரி குரல்
யார் மீது கோபப்படுவது?
வார்த்தைகள்
அப்படியே நிற்கின்றன
முற்றுபெறாமல்...!!

ந க துறைவன்.


முற்றுபெறாத கவிதை


Tuesday 3 July 2018

பற்றி...

பகல் நேரப் பொழுதில்
ஆழ்ந்து யோசித்திருந்தேன்
எதைப் பற்றி...?
இதைப் பற்றியல்ல
அதைப் பற்றியல்ல
அவள் பற்றியல்ல
வேறு
எதைப் பற்றி..?
அதுபற்றி
இப்பொழுது சொல்கிறேன்
அவசரப்பட வேண்டாம்
ஆ...
அவள் நேற்று சொன்னது
என்னைப் பற்றி...
இப்பொழுது
உங்களுக்கு சொல்கிறேன்
அவளைப் பற்றி
கொஞ்சமாய்...


ந க துறைவன்.



அவள் பற்றி...


கனவுகள்

காதல் கனவுகள்