இன்று பாவேந்தர்
பாரதிதாசன் பிறந்த நாள்.
கவிதை.
வானுக்கு நிலவு
வேண்டும்
வாழ்வுக்குப் புகழ்
வேண்டும்
தேனுக்குப் பலாச்சுளை
வேண்டும் – என்
செங்கரும்பே நீ
எனக்கு வேண்டும்.
மீனுக்கு பொய்கை
வேண்டும்
வெற்றிக்கு வீரம்
வேண்டும்
கானுக்கு வேங்கைப்
புலி வேண்டும் – என்
கண்ணாட்டியே நீ
எனக்கு வேண்டும்.
வாளுக்குக் கூர்மை
வேண்டும்
வண்டுக்குத் தேன்
வேண்டும்
தோளுக்குப் பூமாலை
வேண்டும் – அடி
தோகையே நீ எனக்கு
வேண்டும்.
நாளுக்குப் புதுமை
வேண்டும்
நாட்டுக்கு உரிமை
வேண்டும்
கேளுக்கு ஆதரவு
வேண்டும் – என்
கிள்ளையே நீ எனக்கு
வேண்டும்!.
ஆதாரம் ; பாரதிதாசன்
கவிதைகள் தொகுப்பு – பக்கம் – 348.
தகவல் : ந.க.துறைவன்.
*