Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Saturday 28 September 2019

விசாரிப்பு

என்னைப் பார்த்தவர் நலம் விசாரித்தார் நானும் விசாரித்தேன் திருப்தியாய் பிரகாசமற்ற முகத்தில் வியர்வைத்துளிகள். ந க துறைவன்.

Thursday 26 September 2019

விழிப்பு

விழிப்பு

என்னுள் ஒலித்து கொண்டிருக்கிறது
அந்த நள்ளிரவில் எழுந்த
முகாரி ராக இசையின் ஒலி
அதிர்வலைகள் அறையெங்கும்
நிரம்பி வழிகின்றன
அருகில் இருந்தவள் கை
அணைப்பிலிருந்து சற்றே
விலகி இருந்தது
அந்த இசையின் ஒலி
இன்னும் நிற்கவில்லை
அறையின் நீலவொளி பிரகாசம்
அவளின் ஆழ்ந்த உறக்கத்தின்
முகத்தைக் காட்டியது
அவர்கள் விழிப்பதாக தெரியவில்லை
எனக்கும் உறக்கம் வரவில்லை
இசையின் ஒலி எப்பொழுது
நின்றதென்று தெரியவில்லை
இன்னும்  நேரமிருக்கிறது விடிவதற்கு...

ந க துறைவன்.

Thursday 19 September 2019

அழகு

கைக்கோர்த்து அன்பின் நெகிழ்வில் எழும் அலைகள் அழகில் காதல் உணர்வு பெருக்கில் நீண்டு கழிகிறது நேரம் தெவிட்டாது கண்களுக்கு விருந்தாகும் எப்பொழுதும் பார்க்க பார்க்க அழகு உடல் ஆழகு கடல் அழகு. ந க துறைவன்.

பயணம்

எப்பொழுதும் உற்சாகம் தரும்
உணர்ச்சி மிக்க பேச்சு
கலாய்த்து பதில் தரும் தருணங்கள்
சிரிப்பு மிட்டாய்கள்
அழகின் பெருமை பேசும் கவிதைகள்
காதலர்கள் சில்மிஷங்கள்
இவையெல்லாம் இல்லாது வெறுமையாய்
அமைந்து விடுகிறது
காதலி இல்லாத பயணம்.

ந க துறைவன்.

Monday 16 September 2019

மீதி

மீதமிருக்கிறது எஞ்சியவைகள்
என்ன செய்வது மீதமிருப்பதை
எவருக்கு கொடுப்பது அந்த மீதியென
யோசிக்கையில்
கொடுக்கும் மீதியை யாரேனும்
வாங்குவார்களா?என்ற கேள்வி
என்னுள் எழுந்தது
காசு வாங்கிக் கொள்வார்கள்
உணவு வாங்கி கொள்வார்கள்
துணி வாங்கி கொள்வார்கள்
வீணான பொருள்கள் வாங்கிக் கொள்வார்கள்
வேறென்ன வாங்கி கொள்வார்கள்?
என்னிடம் இருக்கும் மீதமிருக்குமதனை
யாரேனும் வாங்க மறுத்து விட்டால்
என் மனம் நொந்து போகும்
மீதமிருக்கும் எஞ்சியவைகள்
என்ன செய்வது வீணாக்காமல்...

ந க துறைவன்.

Thursday 12 September 2019

புத்தன்

1. காற்றின் தழுவல் உணர்வு உதிர்ந்த இலைகள் சத்தம் தியானம் கலையாத புத்தன். 2. அரை இருட்டு உள்ளே விழித்திருக்கும் அகல்விளக்கு புத்தன் அருகில் ஒளி. 3. புத்தனா? அத்திவரதனா? குழப்பத்தில் பக்தர்கள் நெரிசலில் சர்வதரிசனம். 4. உடல் ஓய்வெடுக்கிறதா? அசைவின்றி சாய்ந்து உறக்கம் விழிப்புணர்வில் புத்தன். 5. பூமிக்கு இறங்கி வந்து கிரிவலம் வேடிக்கைப் பார்க்கிறது மலை உச்சியில் நிலா. 6. பிச்சை பாத்திரம் கையில் பசிக்கு உணவு கிடைக்குமாவென துறவியைத் தொடரும் நாய். 7. குகையில் ஆழ்ந்த அமைதி தியான அதிர்வலைகள் வெளியே பௌர்ணமி ஓளி. 8. மறைந்தது நிலவு சிலநொடிகள் இருள் முழு சந்திர கிரகணம். 9. புத்தனை ஏற்றாள் மனைவி புத்தனை ஏற்றான் மகன் சித்தார்த்தனைத் துறந்தார்கள். 10. பதிந்த காலடிச் சுவடுகள் பின்தொடரும் ஆனந்தன் புத்தனின் பின்நிழல். 11. பாதையெங்கும் இருட்டு அரூபம் கடந்து போகிறது அருகில் மர இலைகள் சலசலப்பு. 12. விழிகளுக்குள் உலகம் விரல்நுனியில் வெளி சும்மா இருக்கும் மௌனம். ந க துறைவன்.

Monday 2 September 2019

வெண்டை பரல்கள்

1. வெளிச்சமற்ற அறைக்குள் என்ன செய்கிறது மறைவாய் வலியில் பிரசவமான பூனை. 2. விரல்களென நீண்ட காய்கள் வெடித்து உதிர்ந்தன தரையில் முதிர்ந்த வெண்டை பரல்கள். 3. சந்தர்ப்பம் தேடி பின்தொடர்ந்து பெண்குறி முகர்ந்து பார்க்கும் கலவிக்கு முன் நாய். 4. நானும் அவளும் துண்டிக்கப்பட்டுள்ள இணைப்பின் தொடர்பு எல்லைக்கு அப்பால். 5. அழுகுரல் ஒலி கேட்டு துக்கம் விசாரிக்கப் போகிறது கூடவே அன்போடு நாய். 6. ஆத்தாளுக்குப் பிடிக்கும் ஆரோக்கியத்திற்கு பிடிக்கும் சுவையான ஆடிக் கூழ். 7. எதையோ பார்த்து மிரண்டு கயிறறுத்து கோபமாய் ஓடுகிறது மரத்தில் கட்டிய மாடு. 8. அழகாய் சேர்த்து கட்டியது பிச்சி பிச்சி எறிகிறது குரங்கு கையில் பூமாலை. 9. மடை திறந்ததும் சீராக வயலுக்கு பாய்கிறது நீர் அலகால் அருந்துகிறது குருவி. 10. ஏதோ நடக்கப் போகிறதென்று ஆழ்ந்த யோசனையில் தீவிரமாய் இடம் பெயர்ந்தது பூனை. 11. குவிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள் மீது படுத்து ஓய்வெடுக்கிறது அலைந்து ஓய்ந்த தெருநாய். 12. இரவு அமைதி கிளிகள் மௌனம் இலைகள் இசை. 13. என்ன பிரச்சனையோ? பிரார்த்தனை யோ? அம்பாளை நெட் சுத்தி சுத்தி வலம் வருது. 14. கொழுக்கட்டையில் பதிந்திருக்கிறது அவள் கைவிரல் ரேகைகள். 15. வெள்ள அபாய எச்சரிக்கை கரையோரம் கிராமங்களுக்கு அடித்து அறிவிக்கிறது தண்டோரா. 16. தேரில் வலம் வந்தாள் மக்கள் பார்த்து பரவசம் வேப்பிலைக்காரிக்கு சந்தோஷம். 17. அம்பாள் பேசவில்லை பூசாரி பேசினான் நிறைய குறி கேட்ட பெண்கள் முகம் மாறின. 18. குளிரான மழை நாள் மனம் சூடேற விரும்பி பாரில் குடித்தான் பீர். 19. மனவனத்தில் எவரும் நுழைய அனுமதியில்லை உள்ளே பூச்சிகள் இரைச்சல். 20. எத்தனை நாளாச்சு? உடலுறவு காணாமல் சுருட்டிய பாய் மூலையில். 21. கவ்வி பிடித்தது எலியை வேகமாய் பாய்ந்து சுவரேறி குதித்து பூனை. 22. கூர் பார்வைப் பதித்து ஏதோவொரு தேடலில் உன் கருவண்டு விழிகள் நிலைத்து. 23. மதில்சுவர் தாண்டி தாண்டி பயிற்சி எடுக்கின்றன சிலநாளாய் அழகான குட்டி அணில்கள். 24. உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசு வென்றது கறுப்பு பூனை. ந க துறைவன்.