Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Wednesday 29 June 2022

பூனை ( கவிதை)

பூனை
கவிதை

மின்மினி பூச்சியின் ஒளி
நிலவின் ஒளி
தெரு விளக்கு ஒளி
அனைத்தும் ஒளிர்ந்தாலும்
கள்ளப் பூனைக்கு
தேவை என்னவோ
இருட்டு தான்
அந்த இருட்டிலும்
திருட்டு பார்வையில்
அக்கம் பக்கம் பார்த்து
கருவாடு வாசனை
நுகர்ந்து பதுங்கி
ஒதுங்குவது என்னவோ
அந்த மூலை
வீட்டிற்குள் தான்...!!

ந க துறைவன்


Tuesday 28 June 2022

தும்பி ( கவிதை )

கவிதை
தும்பி

நானொரு தும்பி
மேகமூட்டமான வெளியில்
அங்கும் இங்குமாய் பறந்து
திரிந்து அலைகிறேன்
அந்த நந்தியாவட்டை பூவின்
மீது அமர்ந்து எழுகிறேன்
பூ பறிக்க வந்த சிறுவன்
என்னைப் பிடிக்க முயற்சிக்கிறான்
அவன் கைகளில் அகப்படாமல்
போக்குக் காட்டிபறக்கிறேன்
மேலும் கீழுமாய் எதிரே வந்த
இன்னொரு தும்பி
என்ன பிரச்சினை என்று
விசாரித்தது
பிரச்சினை ஏதுமில்லை
அந்த சிறுவனோடு கொஞ்சநேரம்
விளையாட்டு விட்டு
வரலாமென்று ஆசை
அதான் விளையாடிய களைப்பு
கருத்து வந்த மேகம் சில மணித்துளிகளில்
தூறல் போடத் துவங்கியது
வேகமாய் பறந்து போன தும்பி
எங்கு போய் ஒதுங்கியது என்று
தெரியவில்லை
சிறுவனுக்கும் எனக்கும்...!!

ந க துறைவன்.


Saturday 25 June 2022

Friday 24 June 2022

பால் ( கவிதை )

கவிதை
பால்

அவள் அறியாமலேயே சுரந்தது
ஜாக்கெட் முழுமையும் ஈரம்
முலை நுனியில் பால்.

She unknowingly exploited
The jacket is completely wet
Milk at the tip of the breast.

Thuraivan NG


Wednesday 22 June 2022

உயரம் ( ஹைக்கூ )

ஹைக்கூ கவிதை
உயரம்

எனக்கு குள்ளன் என்று பெயர்
அருகம்புல் அறியுமோ?
பனை மரத்தின் உயரம்.

Name me dwarf
Do you know the neighborhood
The height of the palm tree.

Thuraivan NG


Monday 20 June 2022

குரு ( ஹைக்கூ கவிதைகள்

குரு
ஹைக்கூ கவிதைகள்

1.
புத்தன் சின்முத்திரையில்
விரல் நுனியில் ஒளிரும்
பௌர்ணமி நிலவு.
2.
குருவைப் பற்றி
நினைக்காதவனுக்குள் தான்
எப்பொழுதும் இருக்கிறார் குரு.
3.
பெயர் அற்றவன் நான்
பிரபஞ்சம் எனது சொத்து
கையிருப்பு ஏதுமில்லை எனக்கு.

ந க துறைவன்.


Saturday 18 June 2022

வாழ்த்துக்கள்

தந்தையர் தினம்
நல்வாழ்த்துகள்
ந க துறைவன்


குரு ( ஹைக்கூ கவிதைகள் )

குரு
ஹைக்கூ கவிதைகள்

1.
சீடன் உறவு துறந்தான்
பக்தன் காதல் துறந்தான்
எதையும் துறக்காமல் குரு.
2
எங்கெங்கோ அலைந்து
மனம் சோர்ந்து போனான்
குருவைத் தேடிய சீடன்.
3.
பூனைக்கு குருவின் மீது பாசம்
அருகில் அமர்ந்து தினமும்
கற்கிறது ஜென்.
4.
பௌர்ணமி கவிதை வாசித்தாள்
கேட்டு சிரித்தது காற்று
சிலிர்த்தது வெட்கத்தில் நிலா.
5.
பௌர்ணமி தோறும் அலைந்து
காணாமல் கூடு திரும்பியது
புத்தனைத் தேடிய புறா.

ந க துறைவன் வேலூர்.


Friday 17 June 2022

செம்பருத்தி பூ ( கவிதை )

கவிதை
செம்பருத்தி பூ

மருத்துவமனை
உள் நோயாளியின்
சன்னலுக்கு வெளியே
அழகாய் பூத்து
அசைந்தாடி சிரிக்கிறது
செம்பருத்தி பூ

அவள் ரசிக்கிறாள்
அதன்
அழகை மௌனமாய்
நோய் மறந்து
மெய் மறந்து
சில நிமிடம்...

ந க துறைவன்.