Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Friday 30 October 2015

உறவு...!!


*
 பூவும் இனிப்பும்
புன் சிரிப்பை உதிர்க்கும்
உறவை இணைக்கும்
வாதம், விவாதம்
உறவை முறிக்கும்!
ந.க.துறைவன்.

தானாகவே
ஒரு செடி வளர்ந்து
மௌனமாய்ப்
பூத்துச் செழிக்கிறது
சமாதியின் மேலோ
அதன் அருகிலோ! ! !

*

Thursday 29 October 2015

வாரிசுகளற்ற வீடு...!! [ கவிதை ]


*
தேடிப் பிடித்ததோர்
உயர் தென்னையின் நடுவில்
கொத்தி் கொத்தியே வடிவமைத்த
வட்டப் பொந்து மாளிகையை
மரக்கொத்திகளின் வாரிசுகள்
வேண்டாமென விட்டு விட்டன.
கோரிக்கையற்று
திறந்தே கிடந்த அவ்வீட்டை
அப்போதுதான் காதலினால் இணைந்த
அழகு கிளிகள் இரண்டு ஆக்ரமித்தன…
அங்கேயே உல்லாசமாய் உரசித் தூங்கி
பொரித்த குஞ்சுகளோடு
குதூகலமாய் குடும்பமும் நடத்தின.
எப்படியும்
வழக்காட வரமாட்டார்கள்
வாரிசுகள் என்பதால்….!!
ஆதாரம் : செல்மா காமராசன் எழுதிய “ யாதும் நானாகி ” – என்ற கவிதை தொகுப்பிலிருந்து – பக்கம் – 103.
தகவல் ; ந.க.துறைவன்.

முல்லா கதை ...!!


*
முல்லா நசிருதீனுக்கு உடல் நலமில்லை. மருத்துவரைக் காணச்சென்றார். மருத்துவர் கேள்விகள் கேட்டார்.
“ என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டா, ”
“ இல்லை ” என்று சொன்னார் முல்லா. அவர் கை நடுங்கிக் கொண்டிருந்நதது. முழு போதையில் இருந்தார் முல்லா. அவரிடம் மதுவின் வாடை இருந்தது.
“ சரி அதை விடுங்கள். பெண்கள் தொடர்பு …? ”
“ நிச்சயமாக இல்லை.” என்று கத்தினார் முல்லைா. ஆனால் அப்போதுதான் ஒரு விலைமகளுடன் இருந்து விட்டு வந்திருந்தார். அவர் முகத்தில் அந்தப் பெணெ்ணின் உதட்டுச்வாயம் தெளிவாகத் தெரிந்தது.
“ புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டா? ”
அவர் சட்டைப்பையில் ஒரு சிகரெட் பாக்கெட் இருந்தது.
“ சரி முல்லா, இதெல்லாம் இல்லாமல் உங்கள் உடம்புக்கு இது போன்ற வியாதி வர வாய்பேயில்லையே ”
“எனக்கு ஒரே ஒரு கெட்ட பழக்கம் உண்டு . டாக்டர். ”
“ அது என்ன? ”
“ அடிக்கடி பொய் சொல்வேன். ”.
*
ஆதாரம் : ஓஷோவின் “ பாதை சரியாக இருந்தால்….” – நூல் – பக்கம் – 89 – 90.

தகவல் : ந.க.துறைவன்.

Wednesday 28 October 2015

வாழ்க்கை...!! [ சென்ரியு ]

Haiku – Tamil / English;.
*
பிரிவில் முடிகிறது காதல்
மோகத்தில் முடிகிறது முதுமை
மரணத்தில் முடிகிறது வாழ்க்கை.
*
Love is in the category
Aging in courtship ends
Life ends in death.
*

நூல் விமர்சனம்.


சோட்டா பீம்  - சென்ரியு நூல்.
*
சமீப காலமாக ஹைக்கூ, சென்ரியு என்ற வகைமைகளை இனம்பிரித்து தனித்தனியாக எழுதும் போக்கு தென்படுவது ஆரோக்கியம் அளிக்கின்றது. சென்ரியு கவிதைகள் முன்வைத்து இதுவரை 13 நூல்கள் வெளிவந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வகையில் “ சோட்டா பீம் ” – நீலநிலா செண்பகராசன் அவர்களின் நூல் பதிமூன்றாவது ஆகும். இதில் ‘ சென்ரியு கவிதைகள் ஒரு பார்வை ‘ சிறுகட்டுரை இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல, ஆய்வாளர். செ.ஜோதிலட்சுமியின் ஆய்வேட்டிலிருந்து சென்ரியு குறித்த சுருக்கமான பகுதி இடம்பெற்றுள்ளது சிறப்பான பணி.
சமூக அரசியல் பண்பாட்டு செயல்பாடுகளைக் கவிதையில் எள்ளி நகைக்கிறார். மக்களின் அவலநிலையினைச் சுட்டுகிறார்.  அத்துடன்,
குழந்தைகள் ரசித்தனர்
“ சோட்டா பீம் “
வரையப்பட்டஅமரர் ஊர்தி.
*
சோட்டா பீம் “
மதுவில் மிதக்கும் குழந்தைகள்
காவு வாங்கும் கார்டூன் கதாநாயகன் -  என்று தலைப்பிற்குரிய இரு சென்ரியு கவிதைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இன்னும் முழுமையாக சோட்டா பீம் –மில் குழந்தைகள் சார்ந்த சென்ரியு கவிதைகளைப் படைத்திருந்தால் சிறப்பானத் தொகுப்பாக அமைந்திருக்கும் என்பது எனது கருத்தாகும். சென்ரியுக்கே உரிய தன்மையில் 69 கவிதைகளைப் படைத்தளித்துள்ள நீலநிலா சண்பகராசன் .முயற்சி வரவேற்கத்தக்கதும் பாராட்டுக்குரியதுமாகும்  
விமர்சனம் : ந.க.துறைவன் வேலூர் – 532 009.
செல் ; 9442234822.
*

Tuesday 27 October 2015

மொழி...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
எழுத்து வடிவமற்றது
சர்வதேச மொழி
அழுகை.
*
Shapeless character
International Language
Cries.

*

தவிப்பு...!! [ கவிதை ]

தவிப்பு…!!
*
அவன் சொன்னதை
அவள் தவறாக நினைத்தாள்
அவள் சொன்னதை
அவன் தவறாக நினைத்தான்.
பதட்டமானப் பேச்சில் நேர்ந்த
புரிதலின்மையில்
இருவரும் பேசிக்கொண்டது
வேறுவேறல்ல.
ஒரே சொல்லாடலால்
இருவருமே தள்ளாடல்.
*

Saturday 24 October 2015

சிலைகள்

காந்தமாய் கவர்கின்றன
கல்தூணின் அழகான
காமரூப. சிலைகள்.
ந.க.துறைவன்.


Thursday 22 October 2015

ஏமாற்றம்....? [ சென்ரியு ]

*
உள்ளே யாரும் குளிக்கவில்லை
ஏமாந்து விட்டது
ஓலைதடுப்பில் உட்கார்ந்த காகம்.

*

மனக்குறளி....!! [ கவிதை ]


*
உன்னை எங்கோ தேடினேன்
நீ ரோஜா பூவில் ஒளிந்திருப்பதாக
சொன்னது வண்டுகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ ஆப்பிள் பழத்தில் ஒளிந்திருப்பதாக
சொன்னது குருவிகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ கோவைப் பழத்தில் ஒளிந்திருப்பதாக
சொன்னது கிளிகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ தேங்காயில் ஒளிந்திருப்பதாக
சொன்னது காக்கைகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ திராட்சையில் ஒளிந்திருப்பதாக
சொன்னது எறும்புகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ தாழம்பூவில் ஒளிந்திருப்பதாக
சொன்னது ஒணான்கள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ கோயில் மண்டபத்தில் ஒளிந்திருப்பதாகச்
சொன்னது புறாக்கள்.
உன்னை எங்கோ தேடினேன்
அப்பொழுது என்னுள்ளிருந்து ஒலித்தது
அட, பைத்தியக்காரா….!
அவள் உன்னிதயத்தில் ஒளிந்திருக்கிறாள்
பாரடா என்று உண்மையைச்
சொன்னது மனக்குறளி.
*

Friday 16 October 2015

முல்லா கதை....!!


*
முல்லா நசருத்தீன் துணிகடைக்குப் போனார். ஒரு துணியைக் காண்பித்து விலையைக் கேட்டார்.
“ ஒரு மீட்டர் ஐந்து ரூபாய் ” - கடைக்காரன்.
“ நாலரை ரூபாய்க்குக் கொடேன் ” - முல்லா
“ பெரியவரே, நாலரை ரூபாய்க்கு துணி மண்டியில் தான் கிடைக்கும். ”.
“ சரி, எனக்கு வேண்டிய தானிய மண்டியிலிருந்து வாங்கிக் கொள்கிறேன் ” – முல்லா.
இப்படித்தான் மனிதன் இசையாகப் பொருள் கொள்ள முனைகிறான்.
*
ஆதாரம் :- ஓஷோவின் அஷ்டாவக்ர மகாகீதை – நூல் – பக்கம் 385.
தகவல் :- ந.க.துறைவன்.

*

காணவில்லை...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
ஊருக்கு வெளியே இருந்தது
காணாமல் போய்விட்டது
தாமரை குளம்.
*
It was out of town
Disappeared
Lotus Pond.

*

Thursday 15 October 2015

முள்கள்...‘‘ [ கவிதை ]

முள்கள்…!!
*
சந்தோஷம் முகத்தில் மலரும் பூக்கள்
சந்தேகம் மனதைக் குத்தும் முள்கள்
*
உயர்ந்த கோபுரத்திலும் வாழ்கின்றன
கூண்டிலும் வாழ்கின்றன புறாக்கள்.
*
இன்று உங்களை இகழ்பவர்கள்
நேற்று உங்களைப் பாராட்டியவர்கள்.
*
செயலைத் தொடங்குவது எளிது
செய்து முடிப்பதுதான் கடினம்.
*

காணவில்லை...? [ ஹைக்கூ ]

*
ஊருக்கு வெளியே இருந்தது
காணாமல் போய்விட்டது
தாமரை குளம்.

*

Wednesday 14 October 2015

நவராத்திரி நாயகியே....!!


*
அண்ட சராசரங்கள் ஆள்பவளே உன்
ஆன்ம சொரூபத்தை வணங்குகின்றேன்
அம்மா வென்றே அழைக்கின்றேன்
அன்புடன் உன்னைத் தொழுகின்றேன்
*

பால்பழம் பன்னீர் இளநீரில்
இதமாய் குளிப்பதைக் காண்கிறேன்
சந்தனம் குங்குமம் முழுக் காப்பில்
சந்தோஷமாய் கண்டு களிக்கின்றேன்
*
பச்சை சிவப்பு பட்டாடைகளில்
பளிச்சிடும் அழகினைக் பார்க்கின்றேன்
வண்ணப் பூக்கள் உந்தன் மேனியில்
அலங்கரித்து சிரிப்பதை ரசிக்கின்றேன்
*
தீபஆரத்தி ஒளியில் நாயகியே - உன்
திருமுகம் தரிசனம் செய்கின்றேன்
நவராத்திரி ஒவ்வொரு நாளிலுமே
நவசக்தியே நமஸ்காரம் குவிக்கின்றேன்.
*
துன்பச் சுமையால் தவிக்கின்றேன்
சொல்ல முடியாமல் அழுகின்றேன்
அன்புபொழியும் எனது அன்னையே
அருளும் கருணையும் பொழிவாயே!!.
* 

Tuesday 13 October 2015

யோசளை...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;
*
எந்தப் பூவின் நறுமணம்
நுகர்ந்து பார்க்க விருப்பமோ?
வண்டுகளின் யோசனை.
*
Any flower's fragrance
Sniffing want to see?
The idea of beetles.

*

வானத்தின் கீழ்...!! [ கவிதை ]


*
கோடைவெயிலில் மோர் விற்பவள்
தெருவில் தாகத்தோடு அலைகின்றாள்
புங்கம்இலைகள் போர்த்திய கூடையில்
நுங்கினை வைத்து அமர்ந்துிருப்பவள்
மனிதமுகங்களைப் பார்த்து ஏங்குகின்றாள்
கூடை தலையில் சுமந்து பூ விற்பவள்
சும்மாடு இல்லாமல் திரி்கின்றாள்
விசிறி விற்பவன் வியர்வை வழிய
பாதையில் கூவி திரிகின்றான்
குடை பழுது பார்ப்பவன் மழையில்போது
நனைந்து வீதியில் நடக்கின்றான்
உப்பு விற்பவன் சைக்கிள்வண்டியை
தள்ளிக் களைத்து அலைகின்றான்
பொறி கடலை பட்டாணி சுண்டல்
சூடாக வறுத்து கொடுப்பவன்
வான்மேகத்தைப் பார்த்து நிற்கின்றான்
அசலைத் தேற்றி எடுக்க முடியாமல்
மனமோ எந்நேரம் அலைபாய்கிறது
கடனும் வட்டியும் கட்டியது போக
கையில் போக மிஞ்சுவதென்ன? என்று
கணக்கு பார்த்து மனம் துவள்கிறது
என்றேனும் வாழ்வில் உயர்வோமென்று
எண்ணத்தை தேக்கிய கனவு மனமாய்
வானத்தின் கீழே நம்பிக்கையோடு
வாழ்வோரின் இன்ப வாழ்க்கையிதுவே…!!

*

Monday 12 October 2015

சினம்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
சினம் சினம் சினம்
சினம் சினம் சினம்
ஆறுவது சினம்.
*
Angry angry angry
Angry angry angry
reduce your anger.
*

வரிகள்... [ கவிதை ]


*
சேலை மறைப்பில் பிரசவ வரிகள்
முகத்தில் என்றும் கவலை வரிகள்.
*
உன்னை உள்ளே வைத்துக் கொண்டு
வெளியே தேடுகிறேன் அப்பாவியாய்…!!
*
அனாவசியமாக பேசுவதை விட
அமைதியாக இருப்பதே சிறந்தது.

*

Sunday 11 October 2015

உயில்கள்....!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
பிறக்கின்றன இறக்கின்றன
மீண்டும் எடுக்கின்றன
மறுபிறவி உயில்கள்.
*
Born die
Back-up
Wills reincarnation.
N.G.Thuraivan.

*

Thursday 8 October 2015

பூவழகி...!! [ கவிதை ]


*
அழகிய மலரே அழகிய மலரே
காற்று உன்னைத் தழுவக் கண்டேன்
பனியில் குளிரில் நடுங்கும்போது
போர்வையில்லாமல் வாடக் கண்டேன்
ஆசையாய் பறித்து உள்ளங்கையில்
அணைத்துக் கொண்டு, மெல்லிய
விரல்களால் போர்த்தி விட்டேன்.
பொன்மேனி சிலிர்க்கக் கண்டேன்
என் உள்ளத்தில் நீயோ நறுமணமாய்
புகுந்துக் கொண்டாய். பூவழகி.
*

*

Wednesday 7 October 2015

எச்சரிக்கை...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;.
*
இன்னும் புரியவில்லை
இலையின் அசைவுகள்.
பறவைகளுக்கு எச்சரிக்கையோ?
*
Still do not understand
Leaf's movements.
Warning to birds?

*

முல்லா கதை...!!


*
ஒருமுறை முல்லா நஸ்ருத்தீன் அவருடைய நண்பர் ஒருவர் ஒரு ஹோட்டலில் சந்தித்தார். அவர் சொன்னார். “ அன்பரே, வாருங்கள். ஆளுக்கொரு பெக் மது அருந்தலாம். இங்கு சரக்கு நல்லா இருக்கும்.
”முல்லா மறுத்தார். “ வேண்டாம் நண்பரே, உபசரிப்பிற்கு மிகுந்த நன்றி நான் குடிக்க விரும்பவில்லை. அதற்கு மூன்று காரணங்கள். உள்ளன. முதலாவதாக, நமது மதத்தில் குடிப்பழக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, என் மனைவி இறக்கும் சமயத்தில் நான் இனிமேல் மது அருந்தமாட்டேன் என்று அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளேன். மூன்றாவது காரணம் என்னவென்றால், நான் சற்று நேரம் முன்புதான் வீட்டில் குடித்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன் ” என்றார்.
ஆதாரம் ; - பகவான் ஓஷோவின் – அஷ்டவக்ரா மகாகீதை – பக்கம் – 24.
தகவல் ;- ந.க.துறைவன்.

Tuesday 6 October 2015

அதிர்ச்சி...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;.
*
நடுங்கியது உடல்
ஓடு பாதையில் பிணம்
அதிர்ச்சி தாங்காத மனம்
*
Body trembled
Corpse track
Mind the unbearable trauma

*

காத்திருக்கு...!! [ புதுக்கவிதை ]


*
காற்றில் அழகாய் அசைத்தாடும்
வேப்பமரங்கள் பூத்திருக்கு
நந்தியாவட்டை பூச்செடியில்
வெண்மலர்கள் சிரித்திருக்கு
பசுமையான கிளைநுனியில்
செண்டுப் பூக்கள் சிவந்திருக்கு
மணக்கும் மல்லி பட்டுரோஸ்கள்
கைப்படாமல் காத்திருக்கு
தெய்வமாய் வணங்கும் துளசிசெடி
தொட்டியில் வளர்ந்து நிமிர்ந்திருக்கு
திருஷ்டிக்கு வைத்தக் கள்ளிசெடிகள்
பச்சை மடல்கள் விரி்த்திருக்கு
வீதியில் போவோர் வருவோரெல்லாம்
செடியில் ஒரு கிளையினைக்
கொடுங்கள் என்று கேட்கின்றார்கள்
சிரிப்பை உதிர்த்துச் செல்கின்றார்கள்
*


Sunday 4 October 2015

வாடல்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
அழகாய் பூத்திருக்கும்
சந்தோஷ சிரிப்பிருக்கும்
எதற்கு வாடியது தாயின் முகம்?
*
The impressive Booth
The happy grin
Force was what the mother's face?















11

*

Saturday 3 October 2015

சிந்தனை...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English.
*
எதற்காக புறப்பட்டதோ?
திசை அறிந்து பறக்கிறது
செயலாகும் சிந்தனை.
*
Came from and for what?
Knowing the direction of the Flies
The thought process.

*

அழுதவள் சிரித்தாள்...!! [ கவிதை ]


*
இரவு அழுதவள்
காலையில் சிரித்தாள்
என்னவென்று கேட்டேன்?
ஒன்றுமில்லை என்று
ஒதுங்கி நின்று சொன்னாள்.
*
மலராய் சிரித்தத்
தேவதைக் கண்டேன்
தேவை எதுவென
அவளிடம் கேட்டேன்
சொல்லாமல் தலைகவிழ்ந்த
மௌனம் ரசித்தேன்.

*

Thursday 1 October 2015

நாதம்...!! [ ஹைக்கூ ]

Haiku – Tamil / English;
*
மௌனமாய் என்னுள்
கரைந்தது
இசையின் நாதம்.
*
Silence me
Dissolved
Tone of the music  

*

காந்திய சிந்தனை...!!


*
தமிழ்ச் சிறுவர்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள் ஆகையால், அவர்களுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் எழுத்துக்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் தெரியாது. ஆகவே, அவர்களுக்கு நான் தமிழ் எழுத்துக்களையும் ஆரம்ப இலக்கண விதிகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இது மிகவும் எளிதானதே. தமிழில் பேசுவதில் என்னை எப்பொழுதும் தாங்கள் தோற்கடித்துவிட முடியும் என்பதை என் மாணவர்கள் அறிவார்கள். ஆங்கிலம் தெரியாத தமிழர்கள் என்னைப் பார்க்க வந்தபோது அம்மாணவர்கள்  என் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர். எனக்கிருந்த அறியாமையை என் மாணவர்களுக்குத் தெரியாமல் மறைக்க நான் என்றுமே முயன்றதில்லையாகையால், நான் சந்தோஷமாகவே சமாளித்து வந்தேன். உண்மையாகவே எல்லா விஷயங்களிலும் நான் எவ்விதம் இருக்கிறேன் என்பதை அவர்களுக்குக் காட்டி வந்தேன். ஆகையிளால், அம்மொழியில் எனக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்நதபோதிலும் அவர்களுடைய அன்பையும் மரியாதையையும் மாத்திரம் நான் என்றுமே இழந்ததில்லை. முஸ்லிம் சிறுவர்களுக்கு உருது சொல்லிக் கொடுப்பது இதைவிட எளிதாக இருந்தது அம்மொழியின் எழுத்துக்கள் அவர்களுக்குத் தெரியும். படிக்கும்படியும், கையெழுத்தை விருத்தி செய்து கொள்ளுமாறும் அவர்களை உற்சாகப்படுத்துவதே நான் செய்ய வேண்டியிருந்ததெல்லாம்.
இச்சிறுவர்களில் பெரும்பாலானவர்கள், எழுத்து வாசனையையே இதற்கு முன்னால் அறியாதவர்கள், பள்ளிக்கூடங்களுக்குச் சென்றும் அறியாதவர்கள். ஆனால், அவர்களுக்கு இருந்த சோம்பலைப் போக்கி, அவர்கள் படிக்கும்படி மேற்பார்வைப் பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்க வேண்டியது அதிகமில்லை என்பதை அனுபவத்தில் கண்டேன். இவ்வளவோடு நான் திருப்தியடைந்து விட்டதால், பல வயதையுடையவர்களையும்,  சமாளிப்பது சாத்தியமாயிற்று.
ஆதாரம் ; - மகாத்மா காந்தியின் சுய சரிதை – “ சத்திய சோதனை ”– பக்கம் 404-405.
தகவல் ; ந.க.துறைவன்