*
கொடியில்
துவைத்த உள்ளாடைகள்
தொங்கிக் கொண்டிருந்தன
வெட்கப்பட்டு
உட்கார வந்தக் காகம்
நினைத்தது
மனித மனங்களின்
ஆசைகள் எண்ணி…
*
ஆண்மையின்
கம்பீர நிலை
ஆன்மீகத்தின்
ஆனந்த நிலை
இந்தியப் பாரம்பர்யப்
பரதக் கலை
வடிவமே
நடராஜரின்
நடனச் சிலை.
*
No comments:
Post a Comment