தாலாட்டுக் கேட்டுப்
பொற் கனவில் லயித்துத்
தொட்டில் உறங்கும் குழந்தை
மரத்தில் கத்தும் பறவைகளை
விரட்டி அடிப்பதாய்
பாவனை செய்யும் குழந்தை
வீடு திரும்பினேன் பின்னிரவு
என்னைத் தழுவிக் கொண்டன
குழந்தைகள்
பூங்கா புல்வெளியில்
பந்து விளையாடிப்
பழகும் குழந்தைகள்
வராந்தாவில் அம்மாவுடன்
நடை வண்டிப் பிடித்து
நடை பழகும் குழந்தை