மேலக்குப்பம் டவுன்
பஸ்….!!
*
கிராமத்து நடுத்தரப்
பெண்மணிகள் காய்கறிகளை விற்றுவிட்டு வெறும் கூடையுடன் டவுன் பஸ்ஸில் ஏறி வீடு திரும்பிக்
கொண்டிருந்தனர் சீட்டில் அமர்ந்தவர்கள் மடியில் கூடை. வழியிலும் கூடைகள். குசும்பும்
குறும்பும் கலந்த ஒயா.தக் கிராமத்துப் பேச்சின் சத்தம். நிற்கின்ற நடுத்தர ஆண்கள் உதடு
விரியாமல் சிரிக்கின்றார்கள். இளைஞர்கள் குறுகுறுவெனப் பார்த்துச் சிரிக்கின்றார்கள்.
அப்பேச்சினைக் கேட்டுப் பழகி விட்ட இளம்பெண்கள் வெட்கப்படாமல் செல்போனில் பாடல்கேட்டு
நிற்கின்றார்கள்.
அவர்களின் கூத்தெல்லாம்
பார்த்துக் கேட்டுச் சலித்தப்போன, அந்த ரூட்டில் பல வருசமாய்’ பணியாற்றி வரும் கண்டக்டர்
தெமேவென டிக்கெட் கொடுத்துவிட்டு நகர்ந்து்க கொண்டிருந்தார். டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தப்
பெண், அடிக்கடி அவரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தாள். டிரைவரும் பதிலுக்கு நகைச்சுவையாக
ஏதோ சொல்ல கொள்ளென்று சிரித்தாள். என்னடீ…, சிரி்ப்பு பொங்குது. நாளைக்கும் கொஞ்சம் வச்சிரு என்றாள் பக்கத்திலிருந்தப் பெண். யாரோ ஒருத்தி
நிறுத்துங்க…நிறுத்துங்க… என்று கத்தவே டிரைவர் பிரேக் அடிக்க பயணிகள் பலரும் ஒருவர்
மீது ஒருவர் மோதியணைத்துக் கொண்டார்கள். பஸ்ஸிலிருந்தவர்களின் பேச்சும் சிரிப்பும்
கொஞ்ச நேரம் அடங்கியது.
*