*
என்னென்ன பேச
வேண்டுமென
மனம் சேமித்து
வைத்தவைகள்
களைத்துப்
போகுமளவு
பேசிக்
கொண்டேயிருக்கிறேன்
நீ மட்டும்
கேட்டுக் கொண்டு
ஓரே
வார்த்தையில்
பதில் சொல்லி
விட்டு
மௌனமாகிறாய்.
தொடர்பில்
இருக்கிறாயா? என்று
தெரிந்துக்
கொள்வதற்கு கூட
இயலாமல்
போகிறது
இப்பொழுது
பேசினால் உண்டு
பேசு… பேசு…
மனந்திறந்து… பேசு…
கல்யாணத்திற்குப்
பிறகு
பேச்சு
குறைந்துவிடும்
உன் உறவு
பெருகிவிடும்
களித்து
விடும் உள்ளம்
மலர்ந்து
விடும் இல்லம்.
*
No comments:
Post a Comment