.
புதுமனை புகுவிழா. உறவினர்களெல்லாம் இரவே வந்து விட்டார்கள்.
விடியற்காலை வாஸ்து,பூசை.பால்காய்ச்சுதல், புதுத் துணிக் கொடுத்தல்,
அன்பளிப்பு என எல்லாச் சடங்குகளும் சுபமாகவே நிகழ்ந்தேறின.
காலை டிபன் முடித்து வெளியில் வந்து வீட்டின் முன் நின்று சிலர்
முகப்பின் அமைப்பை மகிழ்ச்சியாகப் பார்த்துப் பேசிக் கொண்டனர்,
சிறுவர்கள் தெருவில் உற்சாகமாக விளையாடினர். குறும்பு செய்யும்
குழந்தைகளை அவரவர் அம்மாக்கள் திட்டி அதட்டி விரட்டினர்
.
புது வீட்டின் மேல் மாடி முலையில் கட்டி வைக்கப்
-பட்டிருந்த அசிங்க உருவத் திருட்டிப் பொம்மையைப் பார்த்து
சிறுவர்கள் மௌனமாய் சிரித்துக் கொண்டார்கள். பெரியவர்கள் கண்டும்
காணாததும் போலிருந்தனர். பெண்கள்,அந்தப் பொம்மையைப் பார்த்து
விட்டு கூச்சத்தோடு வெட்கித் தலைக் குனிந்து வேறு பக்கம் போய்
நின்றனர். அப்பொழுது,திருட்டிப் பொம்மையை யாரோ ஓரு சிறுவன்
அவிழ்த்துக் கீழே இறக்கிக் கிழித்துக் கொளுத்தி விட்டான் என்று
சொல்லி, அவனை உறவினர் ஓருவர் அடித்து விட்டார். கும்பல் கூடி
விட்டது.கொஞ்ச நேரத்தில், கிரகப் பிரவேசம் முடித்த புது வீடு கலவரப்
பிரவேசமாக மாறி அமர்க்களப்பட்டது.
No comments:
Post a Comment