உள்ளம் உருகும் மெட்டு
கிராமத்து மண்வாசம் வீசும்
நாடோடிக் காதல் பாட்டு.
கையேந்தி பவனில் உண்டாள் விருந்து
வயிற்றுக் கோளாறால்
உட்கொண்டாள் மருந்து.
தாயிடம் சோறுண்ணும் சேய்
வேடிக்கைப் பார்த்து நிற்கிறது
அருகில் நன்றியுள்ள நாய்.
நிலவு இல்லாத இரவு
நடந்ததாம் அடுத்த தெருவில்
யாருமில்லாத வீட்டில் களவு
முகத்தில் தெரியுது மினுமினுப்பு
ஊர்வம்பு பேசுகிறார்கள் சிலர்
யாரைப் பற்றியோ கிசுகிசுப்பு.
No comments:
Post a Comment