ஓரு பக்கக் கதைகள்
இரவு நேரம். இந்த பஸ் விட்டால் அடுத்த பஸ் இன்னும்
சில மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் கிராமத்துப்
பயணிகள் அவசர அவசரமாக ஏறினர். உள்ளே நுழைந்தச்
சிலர் சீட்டைத் தேடிப் பிடித்து அமர்ந்தனர். சிலர் நின்றனர்.
ஓருவர் மட்டும் உட்காருவதற்கு அமர்ந்திருந்தவரிடம் நகர்ந்து
அமரச் சொல்லித் தகராறு செய்தார். அவரும் “எப்படிங்க,
இன்னொருத்தர் உட்கார முடியும்?”. “பாருங்க”- என்று பதில்
சொன்னார். பேச்சு சப்தம் உக்கிரமானது. கண்டக்டர் “என்ன
அங்கே தகராறு இடமில்லேன்னா, நின்னுட்டு வாங்க இல்லையா?
இறங்கிடுங்க.சும்மா சண்டை வேணாம்”-என்றார். பயணி சமாதானம்
அடையவில்லை. கண்டக்டரிடம் சண்டைப் போட ஆரம்பித்தார்.
மற்ற பயணிகளும் அவரின் செயலைக் கண்டித்தனர். கண்டக்டர்
வந்து டிக்கட் வாங்கச் சொன்னார். பிறகு “ஏன்யா,பஸ்லே ஏறி ஊரு
வந்ததும் இறங்கி அவங்க அவங்கப் பாட்டுக்குப் போகப் போறீங்க. இ
இந்த கொஞ்ச நேரத்தைச் சந்தோசமா அனுசரிச்சிப் போனா தான்
என்ன? இதுக்குப் போயி இப்படித் தகராறு பண்றியே? – என்றார்.
பயணி அமைதியானார்.
இரவு நேரம். இந்த பஸ் விட்டால் அடுத்த பஸ் இன்னும்
சில மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் கிராமத்துப்
பயணிகள் அவசர அவசரமாக ஏறினர். உள்ளே நுழைந்தச்
சிலர் சீட்டைத் தேடிப் பிடித்து அமர்ந்தனர். சிலர் நின்றனர்.
ஓருவர் மட்டும் உட்காருவதற்கு அமர்ந்திருந்தவரிடம் நகர்ந்து
அமரச் சொல்லித் தகராறு செய்தார். அவரும் “எப்படிங்க,
இன்னொருத்தர் உட்கார முடியும்?”. “பாருங்க”- என்று பதில்
சொன்னார். பேச்சு சப்தம் உக்கிரமானது. கண்டக்டர் “என்ன
அங்கே தகராறு இடமில்லேன்னா, நின்னுட்டு வாங்க இல்லையா?
இறங்கிடுங்க.சும்மா சண்டை வேணாம்”-என்றார். பயணி சமாதானம்
அடையவில்லை. கண்டக்டரிடம் சண்டைப் போட ஆரம்பித்தார்.
மற்ற பயணிகளும் அவரின் செயலைக் கண்டித்தனர். கண்டக்டர்
வந்து டிக்கட் வாங்கச் சொன்னார். பிறகு “ஏன்யா,பஸ்லே ஏறி ஊரு
வந்ததும் இறங்கி அவங்க அவங்கப் பாட்டுக்குப் போகப் போறீங்க. இ
இந்த கொஞ்ச நேரத்தைச் சந்தோசமா அனுசரிச்சிப் போனா தான்
என்ன? இதுக்குப் போயி இப்படித் தகராறு பண்றியே? – என்றார்.
பயணி அமைதியானார்.
No comments:
Post a Comment