ஃ யாருமென் பரந்த மனசைப்
புரிந்திடவில்லை யெனப்
பலரிடம் சொல்லிப் புலம்பியவன்
பூரணமாய் மற்றவர் மனசை
உணர்ந்து நடப்பதாய்
என்னவொரு
அதீதநினைப்பு.
ஃ எதையோ பறிகொடுத்தவனாய்
எதற்காக இங்கே நிற்கிறாய் என
எனக்காகப் பரிவு காட்டியவர்க்குத்
தெரியவில்லை, பறிகொடுப்பதற்கு
என்னிடம் இன்னுமென்ன
மிச்சமிருக்கிறதென்று?
ஃ கூடிக்கூடி நிறைய
எதைப் பற்றியோ பேசினார்கள்
ஏதோ ஒன்று அப்பேச்சினால்
முடிவானதாய்ப் பாவித்து
அனைவரும் கலைந்தனர்
அதிர்ச்சியோ மகிழ்ச்சியோ
துயரமோ வெளிக்காட்டாமல்.
வலைப்பூ மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். கவிதையைப் படித்தேன். வாழ்த்துக்கள்.
ReplyDelete