உனக்காகக் காத்திருந்துக்
கண்ணு ரெண்டும்
பூத்தேனே
காத்து
மழை அடிச்சப் பொழுது
ஓதுங்கி
நின்னுப் பார்த் தேனே
.
மழைத்
தூறல் நின்றப் பின்னே
மேகம்
போல நடந்தாயே-என்
மனசு கடந்துப் போனாயே
மனசு
கடந்துப் போனாயே
.
எஸ்எம்எஸ்
அனுப்பி வைச்சேன்
பதில்
அனுப்ப மறந்தாயோ?
மிஸ்டு கால் போட்டுப் பார்த்தேன்
திறந்து நீ பார்க்கலையோ்?
லாப்டாப்பத் திறந்துப் பாரு
ஈமெயிலைப் படிச்சிப் பாரு.
காதல் வரிப் புடிச்சிருந்தால்
சம்மதிச்சிப்
பதிலைப் போடு
செல்லுக்
குள்ளே எம் படத்தையே
பதிவு
செஞ்சி வைச்சிக்கோ –என்
நினைப்பு
வரும் நேரத்திலே-எனைப்
பார்த்துப் பார்த்துச் சிரிச்சிக்கோ
முத்தம் ஓன்னு கொடுத்துப் புட்டு-உதடு
முந்தானையில் துடைச்சிக்கோ
வெட்கத்திலே சிரிச்சி சிரிச்சி
நெஞ்சில் அணைச்சிப் படுத்துக்கோ.
No comments:
Post a Comment