வண்ண வண்ணப் பூக்கள்
வண்ணத்துப் பூச்சியை-அதன்
பட்டுச் சிறகுகளைப்
புகழ்ந்துப் பேசினால்
அதுவே,அதற்கு மகிழ்ச்சி
.
வண்ணத்துப் பூச்சி-தன்
பட்டுச் சிறகின் அழகை-தானே
புகழ்ந்துப் பேசிக் கொண்டால்
அதுவே,தற்பகழ்ச்சி
.
பூக்களெல்லாம்
வண்ணத்துப் பூச்சியை
அதன் அழகியலையோ
அழகின்மையையோ
ஆண்மையையோ,
ஆளுமையையோ
விமர்ச்சித்துப் பேசினால்
அது,வஞ்சகப் புகழ்ச்சி.
பூக்களின் மற்றும்
பறப்பனவைகளின்
விமர்சனங்களை ஏற்றுக் கேட்டு
நெடுங் காற்றின்
கவிப் பயணத்தில்
வண்ணத்துப் பூச்சிகள்
என்றென்றும் அடைவதில்லை
மனத் தளர்ச்சி.
இயற்கையின் இரகசியங்களை
மன முதிர்ச்சியோடு
ஏற்றுக் கொண்டதால்
கிடைத்த-நற்
கவிதை வாழ்வே
வண்ணத்துப் பூச்சிகளின்
பூரண வளர்ச்சி
.
அந்த
அற்புதத் தருணங்களில்
அதன் பறத்தலைப்
பார்ப்பவருக்கெல்லாம்
என்றென்றும்
மனதை விட்டு அகலாது
ஆனந்தம்,மகிழ்ச்சி.
No comments:
Post a Comment