அவர் எதைக் கண்டறிந்தார்
கண்டறியாதன அந்த ஒன்றை
எப்பொழுது கண்டறிந்தார்?
கண்டறிந்ததை எப்பொழுது
வெளிப்படுத்தினார்?
எவருக்கு கற்பித்தார் ரகசியமாய்
எங்கோ பூரணமாய்
இயங்கும் காணாத
எந்த ஒன்றையும்
அந்த ஒன்றையும்...
ந க துறைவன்.
காணாத அந்த ஒன்றை...
அவர் எதைக் கண்டறிந்தார்
கண்டறியாதன அந்த ஒன்றை
எப்பொழுது கண்டறிந்தார்?
கண்டறிந்ததை எப்பொழுது
வெளிப்படுத்தினார்?
எவருக்கு கற்பித்தார் ரகசியமாய்
எங்கோ பூரணமாய்
இயங்கும் காணாத
எந்த ஒன்றையும்
அந்த ஒன்றையும்...
ந க துறைவன்.
காணாத அந்த ஒன்றை...
அரசியல் பேனர்களை
மிஞ்சி விட்டன.
சாலையோரம் எங்கும்
திருமணம்
இறப்பு
வண்ண வண்ண
டிஜிட்டல் பேனர்கள்.
ந க துறைவன்.
பேனர் விளம்பரங்கள்
நவீன ஹைக்கூ கவிதைகள்
எழுதுவதில் தேர்ந்தவர்
ந க துறைவன்
அவர் ஹைக்கூ கவிதைகளில்
ஆழ்ந்த பொருள் இருக்கும்.
வாசிப்பவர் உள்ளத்தில்
அலைகளை உண்டாக்கி
கொண்டே இருக்கும்.
அண்மையில் வெளியிட்டுள்ள
ஹைக்கூ தொகுப்பு
' ஒரு கை ஓசை '
அரசமரத்தடியின் கீழ்
எண்ணெய் இல்லாத
அகல் விளக்குகள்.
ஒரு கை ஓசையில்
ஓர் ஓசை.
பொன். குமார்.
9003344742
மிக்க நன்றி
பொன். குமார்.
ந க துறைவன்.
ஹைக்கூ விமர்சனம்
1.
மழைத் துளிகள் உடலில் பட்டதும்
சிலிர்த்து எழுந்தன
நீரின்றி வாடிய தவளைகள்.
2.
தவளைகள் நீண்ட உரையாடல்
மகிழ்ச்சி ஆரவாரம்
மழைக் குறித்து விமர்சனம்.
3.
எத்தனை நாளாச்சு?
ஆரோக்கியமாய் குளிச்சி
மழைநீரில் மரங்கள்.
4.
நிலவொளி அற்ற இரவு
வெளியெங்கும் மழை இரைச்சல்
வாகனங்கள் பாய்ச்சும் ஒளி.
5.
மழைக்கு ஒதுங்க
இடம் தேடி அலைகின்றன
தெரு நாய்கள்.
ந க துறைவன்.
மழைக் காலம்
கவலைப் படர்ந்த
வெளிர் முகம்
சத்தம் எழுப்பாத
உள் மனம்
உதடுகள் அசையாத
விசும்பல்.
எதையோ இழந்து விட்ட
ஏமாற்ற உணர்வு
இன்னும் தீராத
வாழ்வின் முரண்
பெரு வலி
எந்நேரமும்
எதிர் நோக்கி...
ந க துறைவன்.
முரண் வலி
செயற்கை
புல்வெளி கீழ்
புதைந்திருக்கின்றன
கடத்தப்பட்ட காக்கும்
கடவுள் சிலைகள்.
ந க துறைவன்.
கடத்தல்
கிறுக்கல்கள்
1.
புரியவில்லை என்றான்
எதுதான் புரிந்திருக்கிறது
அவனுக்கு
கோழி கிறுக்கல்களாய்
கையெழுத்து.
2.
தோழிகளைப் பிரிந்து
தனியாய்
யாருடன்
விளையாட வந்தது
மலையில்
இறங்கிய நிலா.
3.
மறைக்கப்பட்டது
யாருடைய முகம்?
சொல்லப்படும் கதை
எது நிஜம்?
அரசமரத்தடியில்
பிள்ளையார்கள்.
4.
குட்கா
பான்மசாலா
புகையிலை
துர்நாற்றம்
குப்குப்பென்று
வீசுகிறது
தமிழகமெங்கும்.
5.
வெளிச்சத்தில் இருட்டு
மனதில் தெளிவு
பாதையில் சரளைக் கற்கள்.
6.
சோக முகம்
உடல் மறைந்திருக்கிறது
வீட்டின் கதவுக்கு
பின்னால்.
7.
அருவி நீர் சலசலப்பு
பாறைகள்
உணர்ந்தனவா?
குரங்குகள் குதியாட்டம்.
8.
அமைதியான
தாமரைப்பூக்கள்
ஆணவத்தின் மிதப்பில்
அகன்ற
இலையில்
தத்தளிக்கும்
நீர்த்துளிகள்.
9.
தொட்டியில் பூச்செடிகள்
தும்பிகள் வருகை.
துவங்கியது
மழைக் காலம்.
10.
இசையின் ஒலி
இருளில் ஐக்கியமானது
அமைதியில்
மனம் ஒடுங்கி.
ந க துறைவன்.
03-Oct-2018 10:25:42 AM
கிறுக்கல்கள் கவிதைகள்