Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Friday 25 September 2020

புத்தகங்கள் ( மேற்கோள் )

புத்தகங்கள் இளமையில்
வழிகாட்டிகள்
முதுமையில் இனிய
பொழுதுபோக்குகள்.

ந க துறைவன்.

Thursday 24 September 2020

பரிகாரம் ( இருவரி கவிதை )

பரிகாரம் சொல்பவன பணம்பறிக்கிறான்
பரிகாரம் செய்பவன்
பணம் இழக்கிறான்.

ந க துறைவன்.


Monday 21 September 2020

சிற்பக் கலை ( கலைகள் )

சிற்பக் கலை சிறப்பு
அம்மன் சிலை
சாமுத்திரிகா லட்சணம்
கங்கை கொண்ட சோழபுரம் கோயில்
தஞ்சாவூர் தமிழ்நாடு.

Thursday 27 August 2020

மரணம் ( ஹைக்கூ )

உலகை அலங்கரித்து மகிழ்ச்சி
நாளும் மரண அச்சமற்று
பூக்கள் பரிபூரண வாழ்க்கை.

The perfect life adorning
The world and the day of joy
The fearless flowers of death.

Thuraivan NG

Tuesday 25 August 2020

நிழல் ( கவிதை )

முன் செல்லும் என் நிழல் மிதித்து
நடந்ததில்லை என்றும் நான் கவனியாமல்
குறுக்கும் நெடுக்குமாய் நடப்பவர்கள் கர்வமாய் அக்கணம் என் நிழல் மிதித்து நடந்தனர் அருகில்
கோபம் பதட்டமில்லை எனக்கும் நிழலுக்கும்...

ந க துறைவன்.

Thursday 20 August 2020

திருப்பம் ( ஹைக்கூ )

பொன்னிற அழகு
உதிர்ந்த சருகு இலைகள்
என் வாழ்வின் திருப்பம்.

Blonde beauty
Fallen coniferous leaves
The turning point in my life.

Thuraivan NG

Wednesday 19 August 2020

மீன்கள் ( ஹைக்கூ)

குளத்தில் கால் வைத்தேன்
புண் சதைகள்
தின்றன மீன்கள்

I set foot in the pool
Sore flesh
The fishes ate.

Thuraivan NG

Monday 17 August 2020

ஓவியம் ( ஹைக்கூ )

அப்பா மரணம்
இரவு நிலவொளி
அந்த ஓவியம் என்னருகில்.

Dad died
Night moonlight
That painting is near me.

Thuraivan NG

அன்னை சொன்னது

Tuesday 11 August 2020

காத்திருப்பு ( கவிதை )

பூவிற்கு அரும்பியது ஊடல்
பனிஈரம் தாங்காமல் தவிப்பு
பூந்தேன் தேங்கிய தேகம் பூரிப்பு
பருகி வரும் வண்டைக் காணோம்
எத்தனை நேரந்தான் காத்திருப்போ?

ந க துறைவன்.

Monday 10 August 2020

மரம் ( கவிதை )

எப்பொழுதும் என் வீட்டுப் பின்னழகு
வாழைமரம் குலைத்தள்ளி பாரம்
கீழே இரு குருத்துப் பிள்ளைகள் நோன்சானாய்
பெருங்காற்று மழையில் கோடாய் கிழிந்து
வேரோடு தலைசாய்ந்து சேதாரம்.

ந க துறைவன்.

Saturday 8 August 2020

விழுதுகள் ( ஹைக்கூ )

அது என் தொப்புள் கொடி
ஆலிகாலத் தொடர்ச்சி
ஆலமரம் விழுதுகள்.

It's my naval flag
Primitive continuum
Tree tentacles.

Thuraivan NG.

Wednesday 5 August 2020

தவளைகள் ( ஹைக்கூ )

நீரில்லாத குட்டை 
தவளைகள் உரையாடல்
மழை குறித்து விமர்சனம்.

Waterless puddle
Frogs conversation
Review of the rain.

Thuraivan NG.

Saturday 1 August 2020

நேரம்

மௌனமாய் சில நேரம்
மென்மையாய் சில நேரம்
வன்மையாய் சில நேரம்
அன்பாய் சில நேரம்
என்று மண்டு எனக்கான சில நேரம்.

ந க துறைவன்.

Thursday 30 July 2020

கைத்தட்டல் ( சென்ரியு )

கைத்தட்டல் பாட்டு சிரிப்பு
திரும்பி பார்த்தனர் பலரும்
டீக்கடை வாசலில் திருநங்கைகள்.
#
கைதட்டி காசு கேட்டாள்
கன்னத்தில் கிள்ளி
திருநங்கை
வெட்கத்தில் குறுந்தாடி பயணி.

ந க துறைவன்.

Thursday 23 July 2020

ரூபம் ( ஹைக்கூ )

ஹைக்கூ

எழுத்து ரூபம்

சொற்கள் அரூபம்

பேச்சினிடையே மௌனம்.

ந க துறைவன்.

Monday 20 July 2020

நாய்க்குட்டி ( ஹைபுன் )

நேற்று இரவு பெய்த மழையில் அந்த நாய்க்குட்டிப் பட்ட அவஸ்தை பார்க்க சகிக்கவில்லை. அதன் குரல் இன்னும் வேதனை தந்தது. என்ன செய்வது? 
கேட் திறந்து போய் எடுத்து வெளி வராண்டாவில் விடலாம் என நினைத்தால், மழை இன்னும் பலமாய் பெய்தது. தெருவில் நடமாட்டம் இல்லை. யாரையும் கூப்பிட்டு சொல்லவும் வழியில்லை. ஈரமான உடல் தாளமுடியாத நடுக்கம். இறங்கி போய் பார்க்கலாமென்றால் அந்நேரம் பார்த்து சட்டென மின்தடை. டார்ச் தேடுவதற்கு நேரமில்லை. நாய்க்குட்டிக்காக அனுதாபம் பட்டது மனம். 

    * ஓய்ந்தது குட்டியின் குரல்
       குட்டையில் தவளை சத்தம்
       குழந்தை விழித்து அழுகை.*

ந க துறைவன்.

Tuesday 14 July 2020

தூக்கம் ( இருவரி கவிதை )

தூங்கினவனுக்கு சொர்க்கம்

தூங்காதவனுக்கு துக்கம்.

ந க துறைவன்.

Sunday 5 July 2020

வெளிச்சம் ( கவிதை )

மழை வருமென்று எதிர்ப்பார்க்கிறேன்
கருமேகங்கள் வேகமாய்
மின்னல் ஒளியோடு நகர்ந்து போகின்றன
எங்கோ தொலைதூரம்
பறவைகள் கூடுகளில் உள்அமர்ந்து
காத்திருக்கின்றன மழைக்காக
மேல் படிந்த தூசுகள் உதறிவிட்டு
அசைத்தபடி இலைகள்
காற்றில் உற்சாகமாய்
சிணுங்களாய் சிறுதூறல்
படபடவென ஊசிகளாய் இறங்குகின்றன மண்ணில்
பரபரப்பாய் பாதையில் பயணிகள்
மழைத்துளிகள் உடம்பில் படாமல்
பாதுக்காக்க ஒதுங்க இடம் தேடி ஓடுகிறார்கள்
கொஞ்ச தூரம் நனைந்து நடந்து
வீடு வந்தடைந்தேன்
உள்ளே மின்சாரம் இல்லை
நனைந்த உடைகள் கழற்றினேன்
அந்நேரம் பார்த்து பளிச்சென்று
மீண்டும் வந்தது
மின்சாரம் வெளிச்சம்
வெட்கப்பட்டு உள்ளறைக்குள் நுழைந்தேன்
வேறு ஆடைகள் மாற்ற...!!

ந க துறைவன்.


Thursday 2 July 2020

சாத்தான் குளம் ( சென்ரியு )

தந்தை மகன் ரத்தம்
நிரம்பி வழிகிறது
சாத்தான் குளம்.

ந க துறைவன்


மழை

மழை வருமென்று எதிர்ப்பார்க்கிறேன்
கருமேகங்கள் வேகமாய்
மின்னல் ஒளியோடு நகர்ந்து போகின்றன
எங்கோ தொலைதூரம்
பறவைகள் கூடுகளில் உள்அமர்ந்து
காத்திருக்கின்றன மழைக்காக
மேல் படிந்த தூசுகள் உதறிவிட்டு
அசைத்தபடி இலைகள்
காற்றில் உற்சாகமாய்
சிணுங்களாய் சிறுதூறல்
படபடவென ஊசிகளாய் இறங்குகின்றன மண்ணில்
பரபரப்பாய் பாதையில் பயணிகள்
மழைத்துளிகள் உடம்பில் படாமல்
பாதுக்காக்க ஒதுங்க இடம் தேடி ஓடுகிறார்கள்
கொஞ்ச தூரம் நனைந்து நடந்து
வீடு வந்தடைந்தேன்
உள்ளே மின்சாரம் இல்லை
நனைந்த உடைகள் கழற்றினேன்
அந்நேரம் பார்த்து பளிச்சென்று
மீண்டும் வந்தது
மின்சாரம் வெளிச்சம்
வெட்கப்பட்டு உள்ளறைக்குள் நுழைந்தேன்
வேறு ஆடைகள் மாற்ற...!!

ந க துறைவன்.


Wednesday 1 July 2020

திருமணங்கள்

கொரோனா காலத்து எளிய திருமணங்கள் குறித்து..


Friday 26 June 2020

நிழல்கள் ( மினி கவிதை )

நிழல்கள்

மூலிகைகள் நிறைந்த
மலையருவி
கரையெங்கும் விருட்சங்கள்
நீருக்குள்
அடித்து செல்லாது
அலைகளாய் அசைகின்றன
நிழல்கள்.

ந க துறைவன்.


நரி ( கதை )

நரி

" அவன் குணம் என்ன? " என்று கேட்டான் அருகில் இருந்தவன்.
" அது தெரியாதா உனக்கு? " என்று சொன்னான் இன்னொருவன்.
" நரிக்குணம் " என்றான் மூன்றாமவன்.
" நரி
வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன?
மேலே விழுந்து பிடுங்காமல்
போனால் சரி " என்றான் நான்காமவன்.
நகரில் வலம் வருகின்றன
கூட்டத்தோடு கலந்து
பல வஞ்சக நரிகள்.
உறங்கும் நகரை
உலுக்கி எழுப்புங்கள்
விழித்தெழட்டும்.

ந க துறைவன்.


வழித்துணை

வழித்துணை


1.
கொடுத்தவர் அப்பா
வாங்கியவள் அம்மா
பரிசாக வந்தவன் நான்.
2.
பால் முற்றிய சோளக்கதிர்கள்
காவல் பொம்மை ஏமாற்றி
இரைதேடும் குருவிகள்.
3.
காவியுடை கழுத்தில் ருத்திராட்சம் கையில் பிச்சைப்பாத்திரம்
வழித்துணைக்கு சன்யாசினி.
4.
எனக்கு இறைவனைத் தெரியாது
இறைவனுக்கு என்னைத் தெரியாது
ஆன்மாவே என் அப்பா.
5.
எழுதாதப் படைப்பு கலைமனம்
குறைந்த பேச்சு தெளிந்த ஞானம்
புத்தனின் மௌனமே கவிதை.
6.
நசுக்கி அழிப்பதற்குள்
தப்பியோடி விட்டது இன்னும்
எறும்பு கடித்த இடத்தில் வலி.
7.
உறவு நெருக்கம்
உறக்கம் கெடுத்தது
பூவும் அல்வாவும்.
8.
கீழே தாழ்ந்து நிற்கிறேன்
ஆணவத்தோடு மௌனமாய்
அழகு சிதைந்த மலைக்கோட்டை.
9.
நீண்ட நாள்களாக கதவு சாத்தபட்டது
பக்தர்களைக் காணாது தவிப்பு
ஓய்வெடுக்கும் மூலவர்.
10.
பேசாத கற்சிலை அருகில்
காதல்மொழி பேசும் காதலர்கள்
பாதுகாக்கும் கல்தூண் யாளிகள்.
11.
அரை இருட்டில் கோயில் மண்டபம்
காதலர்கள் சந்திப்பு மறைவிடம் மௌனமாய் பார்க்கும் சிலைகள்.
12.
இணைந்து நடந்து வருகிறேன் உன் கூந்தல் சூடிய
மல்லிகைப்பூ வாசம் நுகர்ந்து.

ந க துறைவன்.


Wednesday 24 June 2020

அருள் வாக்கு ( கவிதை )

ஊருக்கு அருள்வாக்கு சொன்னாள்
கேட்டவர்க்கு தீர்வு சொன்னாள்
மலையேற உத்தரவு கேட்டாள்
அருகில் இருந்தவர்
அவள் கையில் வைத்தார்
கற்பூரம்
தீச்சூவாலையோடு
வாயில் போட்டு விழுங்கினாள்
அடங்கி அமைதியானாள்
சாமிவெறியாடிய காமாட்சி
மறுநொடி ஏதும் தெரியாமல்
மௌனமாய் நின்றாள்
அம்மன் எதிரில்
பிரார்த்தனையோடு
கைக்கூப்பி வணங்கி...

ந க துறைவன்.


ஓவியக் கலை ( கலை )

அற்புதமான ஓவியம்