*
ஒரு நாள் எ.தெ.ஏகாம்பரம்
தெருவில் போய்க் கொண்டிருந்தார். வாலிபர்களும் சின்னப் பையன்களும் அவருக்கு வணக்கம்
சொல்லிச் சிரித்தார்கள். பதிலுக்கு ஏகாம்பரம் வணக்கம் சொல்லி சிரித்தார். என்னாங்கடா,
இன்னிக்கி வணக்கமெல்லாம் பலமாயிருக்கு. என்ன சங்கதி என்று கேட்டார். அவர்கள் மழுப்பலான
பதில் சொன்னார்கள்.
“ இல்லெண்ணே ஒரு
சந்தேகம்? “
“ எதைப்பத்திடா?
”
“ இந்த கவிதையெ
படிச்சி படிச்சி பாத்தோம். புரியமாட்டேங்குது. அதான். ”
“ எங்க அதைக் கொடு.
படிச்சிப் பார்க்கிறே ”
படிச்சிப் பார்த்த
ஏகாம்பரம் கொஞ்சநேரம் மௌனமாக இருந்தார்.
அவருக்கும் புரியவில்லையோ
என்னவோ? முகபாவமே மாறி விட்டது.
“ என்ன அண்ணே,
விளங்கிச்சா? ” எங்களுக்கு விளக்கமா சொல்லிட்டுப் போங்க ” என்றார்கள்.
அவர்களுக்கு எப்படிப்
பரிய வைத்துச் சமாளிப்பது என்று யோசித்தார்.
” டேய், இது குறுந்தொகைப்
பாட்டாச்சே? ” சாய்ந்திரமா வாங்கடா முழுசா பதில் சொல்றேன் ” என்றார்.
அண்ணே, இன்னொரு
தரம் நல்லா படிச்சிப் பார்த்து பதில் சொல்லுங்கண்ணே ” என்றார்கள் குறும்புக்காரர்கள்.
“ டேய், அண்ணனுக்கு
தெரியலேடா ” என்று கில்லடித்தார்கள்.
“ மீண்டும் ஏகாம்பரம்.
இது குறுந்தொகைப் பாட்டே தான் ” என்று சொல்லிச் சமாளிக்கப் பார்த்தார்.
“ இதை எப்படி குறுந்தொகைப்
பாட்டுன்னு சொல்றீற்கண்ணே ” என்றார்கள்.
“ நா எத்தனையோ
கவிதைப் படிச்சிருக்கேன். இது குறுந்தொகையே தான்டா?
என்றார்.
இவனுங்க கிட்ட
இன்னிக்கி வசமா மாட்டிக்கி்டடோமே என்று உள்ளுக்குள் பேசிக் கொண்டார் ஏகாம்பரம்.
“ சரி, இது குறு்ந்தொகை
.இல்லெண்ணா, என்ன கவிதைடா ”
“ அண்ணே, ,இது
குறுந்தொகையுமில்லே, பெருந்தொகையுமில்லே, இப்ப புது எழுத்தாளர்கள் எழுதுற நவீன கவிதை
” என்றார்கள்.
“ பழைய கவிதையோ,
புதுக்கவிதையோ, நவீன கவிதையோ இப்பவெல்லாம் இப்படித்தான் எழுதுறாங்களா? என்று சொல்லிக்
கொண்டே நெளிந்தவாறு அவர்களிடமிருந்து மெல்ல நழுவினார் ஏகாம்பரம்.
*