*
அந்த
மலைக்கோட்டையை
ஒரு வழியாய்
பாதையற்றப்
பாதையில்
கால்நடையாய்
நடந்து
உச்சியில்
சேர்ந்து விட்டோம்
அக்
கோட்டையின் மதில்கள்
ஆயிரம்
ஆண்டுகளைக் கடந்து
எத்தனை
உறுதியாய் நிற்கிறதென
எண்ணிப்பார்த்து
கணநேரம்
பிரமித்துப்
போனோம்.
அங்கே மன்னர்கள்
தங்கி
கழித்த
நாட்களை விட
சிப்பாய்கள்
காவல்காத்து நின்று
காலங்கள் தான்
அதிகமென்று
அந்த
மதில்சுவர்களே
சாட்சியம்
சொல்கின்றன.
இன்னும்
மக்கள் பார்வைக்கு
வரலாற்று
நினைவுச் சின்னமாய்
காட்சியளிக்கின்றது
அந்த
மலைக்கோட்டை.
சந்திப்பின்
சாட்சியாக
பெயரைப் பதிவு
செய்வோம்
நம்பெயரைப்
பார்க்கும்
எதிர்கால
காதலர்கள்
நினைவுகூறட்டும்.
கோட்டையை
அழித்துவிட்டார்கள்
காதலையும்
அழித்துவருகிறார்கள்
இப்பொழுது
இரண்டுமே
பசுமையான நினைவுச்
சின்னமாய்…!!
*
No comments:
Post a Comment