*
அவளொரு மலரைப்
போன்று
விழித்தெழுந்தாள்
மனதில்
என்னவோவொரு
புதிய
சிந்தனையோடு
புன்னகைப்
பூத்தாள்.
எல்லையற்ற
ஆசைகளோடு
எதிர்காலச் செயல்களைச்
சித்திரமாய்
வரைந்து
இதயக்
கணினியில் பதிந்தாள்.
அடிக்கடி நிலைக்
கண்ணாடியில்
முகம் பார்த்து
பார்த்து
புன்சிரிப்புச்
சிரித்துக் கொண்டாள்
அவளுடைய அழகே கண்டே
அவள் பொறாமையோடு
முகம்
சுழித்தாள்.
எதைப் பற்றியோ
கேட்டு
விசாரிக்கும்
அன்னியனிடம்
தலைக் கவிந்து
வெட்கப்பட்டுப்
பதில்
சொன்னாள்.
வாசலில்
நிற்கும் சிட்டுக்குருவியை
விரட்டாமல்
ரசித்து பார்த்தாள்
செல்பேன்
ஒலிக்கேட்டு
பதறாமல்
எடுத்துப் பேசினாள்
முகமெல்லாம்
மலர்ந்தது
தாமரைப்
பூவாய்
*
No comments:
Post a Comment