காதல்மரம்…!!
*
பொழுதடைவதற்குள்
வந்துவிடு
உனக்காகக்
காத்திருப்பேன்
நூறடிச்
சாலை
கல்பென்ஸில்
அமர்ந்து
ஆலமரத்தின்
கீழ்.
அந்தப்
பேரூந்தின் நேரம்
தவறவிட்டுவிடாதே
தவறாமல்
வந்துவிடு
என்னெதிரில்
இருக்கும்
மலையில்
மெல்ல மெல்ல
செஞ்சூரியன்
மறைகிறான்
எனக்கோ
பதட்டமாகவே
இருக்கிறது
நீ எப்பொழுது
வந்துச்
சேர்வாய் என்ற
எதிர்பார்ப்போடு
நினைவுகள்
என்னைக்
கடந்து
மேய்ச்சலுக்குப்
போன ஆடுகள்
வீடு
திரும்பிக் கொண்டிருக்கின்றன.
ஊர்க்காரப்
பையன்கள் என்னை
விசாரித்துவிட்டுப்
போகிறார்கள்
எல்லா
பேரூந்துகளும்
நேரத்தோடு
போய்விட்டது
நீ
வரவேண்டிய பேரூந்து மட்டும்
இன்னும்
காணோம்
என்
முகவியர்வையைப் பார்த்து
எனக்காக
விசிறிக் கொண்டிருக்கிறது
ஆலமரம்.
*
*
No comments:
Post a Comment