*
1.
உன் தலையில்
சூடிய
மல்லிகையிலிருந்து
ஒன்றிரண்டு கீழே
விழுகிறது
நான் ஓடி வந்து
எடுத்துவிடவில்லை.
மண் இன்று
அதிஷ்டம் செய்திருப்பதாய்
நினைத்துக் கொண்டேன்!.
*
2.
அதெப்படியோ
நான் விரைவாக வந்தால்
நீயும் விரைவாக
வருகிறாய்.
தாமதமாக வந்தால்
நீயும் தாமதமாக
வருகிறாய்
மனத்திற்கு மட்டுமே
நம்மை சரியாகத்
தெரிகிறது பொல!!
*
3.
நான் பெரிய பெரியதாய்
நிறைய பேசுகிறேன்,
நீ சின்னதாய்
ஒரு பார்வை மட்டும்
பார்க்கிறாய்.
எப்படியோ நீ பேசினாய்
என்பதில்
உயிர்த்துப் பேனேன்
நான்!
ஆதாரம் ;- பறக்க
ஒரு சிறகு கொடு - கவிஞர். வித்யாசாகர் – நூல்.
*