*
இளங்காலைப் பொழுதில,
அந்த பள்ளத்தாக்கு மிகவும் நிசப்தமாக இருந்தது.ஆந்தை கூட அதன் துணையை அழைப்பதை நிறுத்தி
விட்டது. அதன் கனத்த குரலொலி ஒரு மணி நேரம் முன்பு வரை பேட்டுக் கொண்டிருந்தது. கதிரவன்
இன்னும் உதயமாகவில்லை. நட்சத்திரங்கள். இன்னும் மின்னிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில்
மேற்கிலிருந்த மலைப் பக்கமாக ஒரு நட்சத்திரம் மறைந்தது. கிழக்கிலிருந்து வெளிச்சம்
லேசாகப் பரவத் தொடங்கியது. சூரியன் உதயமானதும், பனித்துளி படர்ந்திருந்த அந்தப் பாறைகள்
தகதகவென்று மின்னத் தொடங்கின. கற்றாழை, மெருகு போட்டுக் கொண்டுவிட்டது போல வெள்ளியாய்
ஜொலித்தது. அந்த நிலப்பகுதியின் அழகு விழித்தெழுந்தது.
ஆதாரம் ; ஜே.கிருஷ்ணமூர்த்தி
உரையாடல்கள் – நூல் – பக்கம் 12-13.
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment