*
எழுத
நினைத்ததை மறந்து விட்டான்
மறந்துப்
போனதை எழுதி வைத்தான்.
*
கேலி
செய்தவனே
கேலிக்
கிரையானான்
*
யாரும்
துக்கத்தில் இல்லை
ரொக்கத்தில்
தான் வாழ்கிறார்கள்.
*
பிரமாதமாக
நடக்கிறது பிரசாரம்
யாருக்கும்
மயக்கம் தெளியவில்லை.
*
அவரவர்
பிரார்த்தனையாக
தண்ணீரில்
மிதக்கிறது பணம்.
*
No comments:
Post a Comment