கவிதைகள்
மனுஷி
1.
சாந்தமான முகவொளி
வனதுர்க்கை ராகுகால தரிசனம்
அக்கணம் அழியுமோ ஆணவம்?
2.
வன்மை திமிர் அட்டகாசம்
நெருங்கிய காமுகர்களைத் தனித்து
வதம் செய்தாள் மகிஷாசுரமர்த்தினி.
3.
காமவெறி பிடித்த மிருகங்கள்
போரில் வென்று வீழ்த்தினாள்
சூலத்தின் கீழ் அசுரபிணம்.
4.
அசுரர்கள் ஆணவம் அழித்தாள்
பெண் குலம் காத்தாள்
கற்பு காத்த கனகதுர்க்கை.
5.
துஷடர்களை அழித்த கை
துக்கத்தை ஒழித்த கை
பெண்களைக் காத்த துர்க்கை.
6.
வானுக்கு அப்பால்
பூமிக்கு அப்பால் உள்ளவள்
அனைவருக்கும் சக்திதேவி.
7.
ரத்த பீஜர்கள் சிந்திய ரத்தத்துளிகள்
பட்டுத் தெறித்து ஈரம்
துர்க்கையின் சிவப்பு ஆடை.
8.
வன்கோபம் தணிந்து மோனம்
அடையாளமாய் ரத்தத்துளிகள்
அணிந்தால் வெற்றித் திலகம்.
9.
அசுர கணங்களுக்கு அவள் உக்கிர தேவி
உபாசகர்களுக்கு அவள் வாக்தேவி
எனக்கு அவள் இஷ்டதேவி.
10.
அசுரர்களுக்கு அவள் மகிஷி
தேவர்களுக்கு அவள் மகாசக்தி
மங்கையர் குலத்திற்கு மனுஷி.
ந க துறைவன் வேலூர்.
ஃஃஃ