Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Friday 22 September 2017

சூரிய காந்திப்பூ...



1.
கையில் அகப்படாமல்
ஏமாற்றி விட்டு
பறக்கிறது
பட்டாம்பூச்சி.
2.
வயல் வெளியில் சிரிப்பொலி
இரை தேடும் கொக்குகள்
எழும்பும் இசை நாதம்.
3.
வாழ்வதற்காக நிறையவே
வருமானம் தேடுகிறோம்
ஆனால்,
இனிமையான
வாழ்வைத்தான்
தொலைத்து விடுகிறோம்.
4.
கொடுப்பதும்
பறிப்பதும் தான்
பதவிகள்.
5.
நமது சொந்த வாழ்க்கையை
நாம் வாழ வேண்டும்
மற்றவர் வாழ்க்கையை
நாம் வாழ்தல் கூடாது.
ந. க. துறைவன்.


பட்டாம்பூச்சி.

பட்டாம்பூச்சி.

கையில் அகப்படாமல்
ஏமாற்றி விட்டு
பறக்கிறது
பட்டாம்பூச்சி.

என். கணேசன்.


பட்டாம்பூச்சி பறத்தல்


Tuesday 19 September 2017

வாழ்க்கை.

வாழ்க்கை.

நமது சொந்த வாழ்க்கையை
நாம் வாழ வேண்டும்
மற்றவர் வாழ்க்கையை
வாழ்தல் கூடாது.

கணநாயகன்.



வாழ்க்கை.


வாழ்க்கை.

வாழ்க்கை.

நமது சொந்த வாழ்க்கையை
நாம் வாழ வேண்டும்
மற்றவர் வாழ்க்கையை
வாழ்தல் கூடாது.

கணநாயகன்.



வாழ்க்கை.


Friday 15 September 2017

பிரதிபலிப்பு...!!

நீருக்குள் நிழல்
பிரதிபலிப்பதை உணருமா?
அழகான மரங்கள்.

ந க துறைவன்.


Tuesday 12 September 2017

சிரிப்பொலி...!! ( ஹைக்கூ )




Haiku – Tamil / English.

வயல் வெளியில் சிரிப்பொலி
இரை தேடும் கொக்குகள்
எழுப்பும் இசை நாதம்.
*
Smile on the field outside
Cranes looking for prey
Wake up

N.G. Thuraivan.

Saturday 9 September 2017

கேள்விகள்...!! ( கவிதை )




நிறைய கேள்விகள் கேட்டேன்
அவளிடம்
எந்த பதிலும் சொல்லவில்லை
எல்லாமே மௌனம்.
*
ஏமாற்றங்கள்
ஏமாற்றங்களால் தான்
வெல்லப்படுகின்றன.
*
பூமியில் உள்ளவர்களை
இரவில் வேடிக்கைப் பார்த்து
சிரிக்கிறது நிலா.
*
கலையாத மேகம்
நூல் இழைகளாய்
இறங்குகின்றன மழை
ந.க. துறைவன்.


Wednesday 6 September 2017

நூல் அறிமுகம்.




புதிய ஹைக்கூ நூல் அறிமுகம்.

தலைப்பு     : ஹைக்கூ உலகம்

தொகுப்பாசிரியர் : முனைவர் ம. ரமேஷ்

பங்கு பெற்ற கவிஞர்கள் ; 11 பேர்.
மொத்த ஹைக்கூ கவிதைகள் : 660.

வெளியீடு ; ஒவியா பதிப்பகம்
            17 - 13 – 11, ஸ்ரீராம் காம்ப்ளஸ்க்,
            காந்தி நகர் மெயின் ரோடு,
            வத்தலகுண்டு – 624 202.
            திண்டுக்கல் மாவட்டம்
            தமிழ்நாடு.
            செல் ; 766 755 7114.

விலை     ரூ.120/-

     முகப்பு அட்டையில், கதவின் அருகே இருட்டில் ஏக்கமாய் நின்றிருக்கும் சிறுமியின் கண்கள் எதிர்கால வெளிச்சத்தை நோக்கி ஊடுருவிப் பாய்கின்றன. இதனையொரு குறியீடாகவே காண்கிறேன். 11 கவிஞர்களின் 660 ஹைக்கூக்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் வாசகர்கள் படித்து நுகர்ந்தது அனுபவிக்க வேண்டும்.

கவிதைகளைத் தொகுத்தத் தம்பி ம. ரமேஷ், மற்றும்
வெளியிட்ட நண்பர் வதிலைபிரபா இருவருக்கும், பங்கு
பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நல்வாழ்த்துக்கள்.

ந.க. துறைவன்.   


Sunday 3 September 2017

குட்டிக் கதை...!!

ஓஷோவின் குட்டிக்கதை..


ஒரு துறவி இமயமலைமீது ஏறிக்கொண்டிருந்தார். தோளில் துணி மூட்டை, ஒரு கையில் கமண்டலம் – தண்டம். இன்னொரு கையில் ஊன்றுகோல். இவ்வளவுதான் இவரது சுமை. நண்பகல். செங்குத்தான ஏற்றம். துறவி வியர்வையில் நனைந்திருந்தார். சற்று முன்னால் ஒரு சிறுமியும் மலை ஏறுவதைப் பார்த்தார். பத்து- பன்னிரண்டு வயதுதான் இருக்கும். அவள் தோளில் தம்பியைத் தூக்கிவைத்து ஏறிக் கொண்டிருந்தாள். ஆறு – ஏழு வயதுச் சிறுவன். நல்ல பருமன். அவள் உடலிலும் வியர்வை வெள்ளம்.

துறவி பரிதாபப்பட்டார். “ மகளே, பெரிய சுமையைத் தூக்கி வைத்துக்கொண்டு போகிறாயே கஷ்டமாக இல்லையா?, என் மூட்டையே எனக்கு பாரமாக இருக்கிறதே. ” என்றார்.

சிறுமி திடுக்கிட்டுத் திரும்பினாள். துறவியைக் கண்டாள். சிறுதுணி மூட்டையையும் கவனித்தாள். புன்முறுவலுடன் சொன்னாள். “ சாமி, உங்களுக்கு அந்த மூட்டை பாரமாக இருக்கலாம். எனக்கு அப்படியில்லை. ஏன்னா இவன் என்னோட தம்பி. ” என்றாள்.
ஆதாரம் ; ஓஷோவின் – அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 211.
தகவல் ; ந. க. துறைவன்.

*