1.
கையில்
அகப்படாமல்
ஏமாற்றி
விட்டு
பறக்கிறது
பட்டாம்பூச்சி.
2.
வயல்
வெளியில் சிரிப்பொலி
இரை
தேடும் கொக்குகள்
எழும்பும்
இசை நாதம்.
3.
வாழ்வதற்காக
நிறையவே
வருமானம்
தேடுகிறோம்
ஆனால்,
இனிமையான
வாழ்வைத்தான்
தொலைத்து
விடுகிறோம்.
4.
கொடுப்பதும்
பறிப்பதும்
தான்
பதவிகள்.
5.
நமது
சொந்த வாழ்க்கையை
நாம்
வாழ வேண்டும்
மற்றவர்
வாழ்க்கையை
நாம்
வாழ்தல் கூடாது.
ந.
க. துறைவன்.
No comments:
Post a Comment