Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Tuesday 31 May 2016

கள்ளக் கருங்காகம்...!! ( சிறுவர் பாடல் )


*
கன்னங் கரிய காகமே!
கள்ளங் கருங் காகமே!
என்ன கார ணத்தினால்
எத்தித் திரிந்து வாழ்கிறாய்?

சின்னஞ் சிறுவர் ஆவலாய்
சீடை, முறுக்கு, தேன் குழல்
தின்னும் போது மெல்ல நீ
திருடிக் கொண்டு போகிறாய்?

என்ன செயல் உன் செயல்!
ஈனச் செயல் அல்லவோ?
தின்னும் பண்டம் போனதால்
தேம்பிச் சிறுவர் அழுகிறார்.

கன்னங் கரிய காகமே!
கள்ளங் கருங் காகமே!
உன்னைப் போன்ற திருடர்கள்
உலகில் யாரும் இல்லையே!

கறுத்த உடல் கொண்ட நீ
கறுத்த மனசும் கொண்டதால்,
வெறுத்து மக்கள் உன்னையே
விரட்டி அடிக் கின்றார்கள்!

கிருஷ்ணன் நம்பின் குழந்தைப் பாடல்
ஆதாரம் ; கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் – தொகுப்பு – பக்கம் – 330.
தகவல் ; ந.க.துறைவன்.

*  

சர்வதேச குழந்தைகள். தினம்.

நல்வாழ்த்துக்கள்.

புதிய இடம்
பதிய உறவு; பழக
வெட்கப்படும் குழந்தைகள்.

தன்னிகரில்லாத
தாய்ப் பாலின்
சுவை அறியும் குழந்தைகள்.

ஆசையாய் கேட்டதும்
முகத்தோடு சேர்த்து அணைத்து
முத்தம் கொடுக்கும் குழந்தைகள்.

சர்வ தேச குழந்தைகள் வாழ்க வளர்க.
ந.க.துறைவன்.

*

Monday 30 May 2016

விழி்ப்புணர்வு...!! ( துணுக்கு )

விழிப்புணர்வு

“ ஆன்ம ஞானம் பெறுவது எப்படி? ”
“ மிக எளிது, சூரியன் தினமும் காலையில் கிழக்கே உதிக்க நீ என்ன முயற்சி செய்கிறாயோ அதுவே போதும். ”
“ அப்படியானால் நீங்கள் சொல்லித்தரும் ஆன்மீகப் பயிற்சிகளுக்கெல்லாம் என்ன அர்த்தம்? ”
“ சூரியன் உதிக்கும்பொழுது நீ தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காகத்தான். ”
ஆதாரம் ; நொடிப் பொழுதில் ஞானம் – அந்தோணி டி மெல்லொ – நூல் - பக்கம் – 19.  
தகவல் ; ந.க.துறைவன்

*

Sunday 29 May 2016

சின்னப் பொண்ணு...!! ( கவிதை )



எங்கள் ஆப்பில் மரத்தில்
சின்னக் கிளைகள் இல்லை;
மலர்கள் பூத்துக் குலுங்கவில்லை.
எங்கள் சின்னப் பெண்ணுக்கு
அப்பா, அம்மா இல்லை.
அவளைச் சிங்காரிக்க யாருமி்லை;
அவளை ஆசிர்வதிக்க யாருமில்லை.
-    திருமணப் பாடல்.
ஆதாரம் : அலெக்சாந்தர் பூஷ்கின் – காப்டன் மகள் – எள்ற நூலிலிருந்து – பக்கம் – 225.
தகவல் ; ந.க. துறைவன்.

*  

Saturday 28 May 2016

கூழும் எலிப் புழுக்கைகளும்...!! ( ஜென் )

ஜென்.

கூழும் எலிப் புழுக்கை்களும்…!!

ஒரு மூத்த துறவி கோடைக் காலம் முழுவதும் போதனை செய்யவில்லை.
கோடைக் காலம் இப்படியே கழிந்து விட்டது. இனியும் போதனையை எதிர்ப்பார்க்க முடியாது.
நேரடிக் காரணம் பற்றியாவது இரண்டு வார்த்தைச் சொல்லுங்கள்.
என்னிடம் அதிகம் எதிர்ப்பார்க்காதீர்.
‘ நேரடிக் காரணம் ‘ குறித்துப் பேச இயலாது.
பிறகு அப்படி சொன்னதற்கு வருந்தினார்.
ஏன் அப்படிச் சோன்னேன்? பிரச்சினையை நானே தேடுகிறேன்.
அடுத்த அறையிலிருந்த இன்னொரு மூத்த துறவி அதைக் கேட்டுச் சிரித்தார்.
சுவையான கூழுள்ள பானையில் எலிப்புழுக்கைகள் விழுந்து விட்டன.
கருத்து:
தேவையற்ற வார்த்தைக்கள், கூழில் விழும் எலிப் புழுக்கள் போன்றவை.
ஆதாரம் ; ஜென் வெளிச்சம் – நூல் – பக்கம் – 133.
தகவல் ; ந.க.துறைவன்.

*

Thursday 26 May 2016

காதல்...!! ( கவிதை )



அழகுப் பெண்ணே!
உனக்கு இன்னும் வயசு வரவில்லை.
உன் அப்பாவைக் கேள்,
உன் அம்மாவைக் கேள்,
அழகுப் பெண்ணே!
உன் அப்பாவைக் கேள்,
உன் அம்மாவைக் கேள்,
உறவுக்காரர்களைக் கேள்,
அழகுப் பெண்ணே!!
அறிவு வரும் வரை காத்திரு,
சீதனம் சேரும் வரை காத்திரு.
-    நாட்டுப் பாடல்.

என்னைக் காட்டிலும் உயர்ந்தவனைப்
பார்த்தால் என்னை மறப்பாய்;
என்னைக் காட்டிலும் தாழ்ந்தவனைக்
கண்டால் என்னை நினைப்பாய்.
    - நாட்டுப் பாடல்.   
ஆதாரம் ; அலெக்சாந்தர் பூஷ்கின் – காப்டன் மகள் – என்ற நூலிலிருந்து – பக்கம் – 91.
தகவல் ; ந.க.துறைவன்.

*

Wednesday 25 May 2016

அறிவாளி...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
சுழலில் சிக்கிய படகு
நீச்சல் தெரியாமல் தத்தளிப்பு
படகோட்டியை அவமதித்த அறிவாளி
*
The boat caught in a spiral
Swimming knowing thereof
Insulting the crew is awesome

*

எதிர்ப்பார்ப்பு...!!



நீண்ட காலமாக தாமதமாகி வரும் 78.2% ,IDA இணைப்பு BSNL ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சினையாகும். கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதும், தற்போதைய பாஜக ஆட்சி பதவியேற்ற நாளிலிருந்தும் பேசி வருகின்ற பிரச்சினையாகும். இப்பிரச்சினையினை நிறைவேற்றி தருவதாக ஒப்புதல் அளித்துள்ள அரசு இன்னும் அதிகாரிகள் மட்டத்தில் கோப்பு மேசைக்கு மேசை தாவிக் கொண்டிருக்கிறதே தவிர பிரச்சினை முடிந்தபாடில்லை. பாஜக அரசு இரண்டு ஆண்டுகள் முடித்து செய்த சாதனைகள் பற்றி பேசத் துவங்கியுள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்கள் பொருளாதார ரீதியாக குடும்பத்தில் எத்தனையே சூழ்நிலைகளைச் சமாளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். மூத்தக்குடிமக்களான அவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு, இப்பிரச்சினையினை கால தாமதப்படுத்தாமல் அரசு நிறைவேற்றி தருமா? என்று ஆவலோடு ஊழியர்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

என்.கணேசன்.     

Tuesday 24 May 2016

சிரிப்பு...!! ( முல்லா கதை )


*
காபி கடையில் தெரியாத ஒருவர் கூறிய ஒரு நீண்ட கதையை முல்லா நஸ்ருதீன் மிகவும் கவனமாகக் கேட்டார். ஆனால் அந்த மனிதர் தெளிவில்லாமல் மிகவும் மோசமாகவும் பேசியதால் அந்தக் கதையானது வேடிக்கையானதாக இல்லை. அப்போது முல்லாவைத் தவிர வேறு யாரும் சிரிக்கவில்லை. ஆனால் முல்லா இதயம் நிறைந்து சிரித்தார்.
அந்த அந்நியர் போன பிறகு நான் முல்லாவிடம்  “ முல்லா நீ ஏன் சிரித்தாய்? ” என்று கேட்டேன்.
அதற்கு முல்லா, “ இதை நான் எப்போதும செய்வேன். நீங்கள் சிரிக்கவில்லை என்றால் அதை அவர்கள் மீண்டும் சொல்லக்கூடிய ஆபத்து எப்போதும் இருக்கிறது. ” என்றார்.
ஆதாரம் : ஓஷோவின் – திடீர் இடியோசை – நூல் - பக்கம் 358.
தகவல் : ந.க.துறைவன்.

*

மூக்குத்தி...!! ( சென்ரியு )

Senryu – Tamil / English.
*                                 
இருட்டறை எங்கும்
ஒளி வீசியது
மூக்குத்தி வெளிச்சம்.
*
Dark everywhere
Light shone
Illuminated nose.

*

Monday 23 May 2016

நெற்றி வடு...!! ( கவிதை )


*
திங்கட்கிழமை விநாயகருக்கு
வாழைப்பழத்தில் விளக்கேற்றினாள்.
செவ்வாய்கிழமை துர்க்கைக்கு
எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றினாள்.
புதன்கிழமை விஷ்ணுசகஸ்ரநாமம் படிச்சி
துளசிமாடத்தில் விளக்கேற்றினாள்.
வியாழக்கிழமை குருபகவானுக்கு
தேங்காயில் விளக்கேற்றினாள்
வெள்ளிக்கிழமை காமாட்சிக்கு
பொங்கல் வச்சி மாவிளக்கேற்றினாள்.
சனிக்கிழமை கிரகத் தோஷம் நீங்கிட
சனிபகவானுக்கு எள் விளக்கேற்றினாள்.
ஞாயிற்றுக்கிழமை காலபைரவருக்கு
உச்சிவேளைப் பூசையில் விளக்கேற்றினாள்.
எல்லா நாளும் பக்தியோடு வழிப்பட்டவளுக்கு
நல்ல வரன்  அமையவில்லை.
புகுந்த வீட்டிற்குப் போய் விளக்கேற்றும்
பாக்கியம் இன்னும் கிட்டவில்லை - இன்னும்
பகவான்கள் யாரும் கண் திறக்கவில்லை்.
நெற்றிவடு வலப்புறமாய் கருமுடிகள் ஒன்றிரண்டு
வெள்ளி கம்பியாய் தகதகத்து மின்னுகிறது.

*

Friday 20 May 2016

கணிப்பு....!!



எங்க ஊர்லே எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்னு ஒருத்தர் எப்பவும் ஏதாச்சும் ஒண்ணு பத்தி பேசியே சாதிப்பார். அவர் சொன்ன கருத்து கணிப்பு தான் இந்த தேர்தல்லே நிரூபிச்சி காட்டியிருக்கு. இப்படி ஊருக்கு ஒருத்தர் இருக்காங்க. நம்ம நைனா கி்ரா.கூட இப்படி ஒருத்தரை தன்னோட கதை ஒண்ணுலே எழுதியிருக்கார்னு எனக்கு ஞாபகம். அந்த ஏகாம்பரங்களே இன்னிக்கு நம்ம நாட்டு மிகவும் தேவையின்னு எனக்கு படுது. நீங்க என்ன சொல்றீங்க?
*

Thursday 19 May 2016

சுமை...!! ( ஹைபுன் )


*
பலாமரத்திற்கு பலாப்பழம் சுமை. மாமரத்திற்கு மாங்கனிகள் சுமை. தென்னைக்கு இளநீர்க் காய்கள் சுமை. காய்க்கும் மரங்கள் எல்லாம் தாய்மைக் குணம் கொண்டவை என்பதால், அவைகள் மகரந்தச் சேர்க்கையால் சூல் கொண்டு பூவாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகிச் தொங்குகின்றன. பெண்ணே! நீ  இயற்கையின் படைப்பில் தாய்மையின் வசீகரமான அழகைப் பெற்று திகழ்கின்றாய். இயற்கைச் சுமப்பதை விட கூடுதாய், நீ வயிற்றிலே சுமக்கிறாய் இடுப்பிலே சுமக்கிறாய் தலையிலே சுமக்கிறாய் பூரணமாய் அனுபவிப்பவளுக்குத் தானே தெரியும்? அந்த சுமையின் அந்தரங்கம்.

கருவறையின்  சுமை
தாய்மையின் உச்ச சுகம்
பெண்ணிற்கு பெருமை

*

நிகழ்வுகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*  
இப்பொழுதும் எத்தனையோ நிகழ்வுகள்?
கடந்த கால நினைவில் மனம்
மலையை கடக்கிறது பறவை.
*
Many events now?
Remember the mind of the past
Bird mountain passes.

*

யாருக்கு வெற்றி?



வைகோ மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் நீச்சல் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டார்கள்.
*
சக தோழமைக் கட்சியினரைத் தந்திரமாக ஏமாற்றி வைகோ அம்மாவை ஜெயிக்க வைத்து விட்டார்.
*
ஊழல் இலவசம் பணம் இவைகள் கம்பீரமாக மாலை அணிந்துக் கொண்டு ஜனநாயகம் வெற்றி.
*

Wednesday 18 May 2016

பயணமே சுகம்...!! ( கவிதை )



சிரித்த முகத்தோடு இருந்தார்
கடுகடுப்பாக இருக்கும் கண்டக்டர்.
*
சில்லறை வாங்காமல் .இறங்கினாள்
செல் பேச்சில் மெய் மறந்து..!!
*
பக்கத்தில் நின்றவள் கூச்சப்பட்டாள்
அருகில் நின்றவன் ஒதுங்கி நின்றான்.
*
அவள் பெயரைக் காட்டியது
கழுத்தில் அணிந்த அடையாள அட்டை
*
காலியான இடத்தில்  வாடியிருந்தது பூ
எடுத்து விட்டு உட்கார்ந்தாள் வந்தவள்.

*

Tuesday 17 May 2016

படிங்க...!!



ஊழலில் ஈடுபட்டுள்ள இருபெரும் தமிழகத் திராவிடக் கட்சிகளுக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது. சிறுபான்மை மக்களிடையே இலவச ஆசை வாக்குறுதிகள் கூறி, கொடுத்து மிகக் கேவலமாகப் பிச்சைக்காரர்கள் மக்கனை வழி நடத்துவது என்பது தமிழ்மக்களை தமிழகக் கட்சிகளே அவமானப்படுத்துக்கின்றன என்பதை சகித்துக் கொள்ள முடியாத செயலாகும்.
*
2016 – தேர்தலில் தொகுதி வாரியாக நின்றுள்ள வேட்பாளர்கள் பெரும்பான்மையோர் கோட்டீஸ்வரர்கள் என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல் தெரிவிக்கின்றது. இது எதிர்கால இந்திய அரசியல் அதிகாரக் குவிமையமாக அமைத்து ஆதிக்கம் செலுத்து்ம் பலம் பொருந்திய சக்தியாகத் திகழும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

*

டி குடிச்சிகி்ட்டே படிங்க...!!


*
பல கோடி இந்திய ரூபாய் நோட்டுக் கட்டுகள் இத்தேர்தல் சமயத்தில் தான் தமிழகத்தில் அதிகம் புழுக்கத்தில் நடமாடியுள்ளது என்பதைப் பத்திரிகைச் செய்திகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
,இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, அசுரவேகத்தில் இப்பொழுது இந்திய அரசியல்கட்சிகள் பணபலம் மிகுந்த கட்சிகளாக வளர்ச்சிப் பெற்றுள்ளது என்பதை தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் நிரூபிக்கின்றது.

*

டீ குடிச்சிக் கிட்டே படிங்க...!!


*
ரூபாய் 570 கோடி பணம் கண்டெய்னர் லாரிகளில் பயணப்பட்டதைப் பார்க்க முடியாவிட்டாலும், ஊடகங்களின் வாயிலாக பார்த்தாவது மக்கள் மலைத்துப் போய் வேடிக்கையாகச் சிரிக்கிறார்கள். சிந்திக்கிறார்கள். பல கேள்விகளையும் சந்தேகங்களையும்  புலனாய்வுப் பாணியில் வெளியில் தெரியாமல் தங்களுக்குள்ளாகவே அரசல் புரசலாகப் பேசிக் கொள்கிறார்கள். இத் தேர்தலில் இ்ந்திய ஜனநாயகம் இவ்வளவு படு கேலிக் கூத்தான முறையில் செயல்பட்டிருக்கிறது என்பதை அறிந்து வெட்கப்பட வேண்டியிருக்கிறது? இனி எதிர்கால இந்திய அரசியல் செயல்பாடுகள் இப்படித்தானிருக்குமோ?
*


காத்திருப்பு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
மழையை எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறது
காட்டில் வளரும் மரங்கள்.
*
Expectant rain
Waiting Growing
Trees in the forest.

*

Monday 16 May 2016

குடை...!! ( ஹைபுன் )



இந்தப் பூமி அதிகம் வெப்பமடையாமல் பாதுகாப்பதற்காக மரம்செடி கொடிகள் எல்லாம்  குடை பிடித்து நிழல் கொடுக்கின்றன. உயிரினங்கள் கடுமையான வெப்பத்திலிருந்து, தற்காத்துக் கொள்கவதற்காக நிழல் தேடி ஒதுங்கி நின்று ஆசுவாசம் பெறுகின்றன. வயதானவர்கள் கையில் குடை வைத்துக் கொண்டே நடைபழகுகிறார்கள்.  வெயிலுக்கு நீ குடைப் பிடித்துப் போவதை நான் பார்க்கவில்லை மழைக்கு நீ குடைப் பிடித்துப் போவதை நான் பார்க்கவில்லை எப்பொழுதும் எடுத்து விரித்துப் போகாமல் எதற்காக வைத்திருக்கிறாய் கைப்பையின் உள்ளே வண்ணக்குடை? அது உன் பாதுகாப்பிற்காகத்தானே?

எடுத்துக் குடையை விரி
இருவரையும் இணைக்கும்
மழைக்கு நன்றி சொல்வோம்.


Saturday 14 May 2016

சிவப்பு தக்காளி...!! ( கவிதை )



*.
கோடைக் கால வெப்ப நிலை கொதிப்பு ஏறுது
தக்காளி போல் சிவந்த மேனி  தத்தளிக்குது!

மல்லிகைப்பூ கூந்தலிலே அழகு காட்டுது
சுட்டெரிக்கும் வெயிலிலே சிரிக்க மறுக்குது!

நெற்றிக் கன்னம் கண்களிலே சோர்வுத் தெரியுது.
முலாம்பழம் முகத்தினிலே வியர்வை  வழியுது

வெள்ளரிப் பிஞ்சாய் தளிர்கரங்கள் துவண்டிருக்குது
வெள்ளமாக அரும்பி வியர்வை வழிந்து ஓடுது.
.
அவசரமாய் பஸ் பிடிச்சி போகப் பார்க்குறே
ஜன நெரிசல் புழுக்கத்திலே மூச்சுத் திணறுது. 
.
,இறங்கி நடந்து போகையிலே அசதி தெரியுது
ஆண்கள் பார்க்கும் பார்வையிலே அனல் வீசுது.
.
ஆபிஸு கேட்டிக்குள்ளே நுழைஞ்சி போகிறே
அழுது வடிஞ்சி நிற்கிற முகங்கள் பார்க்குறே!
.
அப்பாடா என்ன வெயில் என்று புலம்புறே?
ஆயாசம் தீரும் மட்டும் தண்ணிக் குடிக்கிறே!!.

*

வரம்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வாழ்க்கை ஒரு வரம்
மனிதருக்கு
வாழக் கிடைப்பது ஒரே தரம்.
*
Life is a gift
Humans
Only quality live availability.

*

Thursday 12 May 2016

விம்மல்...!! ( கவிதை )



மனம் விம்ம விம்ம
வெடித்து மேலெழுந்து
இமை விழிகள் கலங்கி
ஈரங் கசிந்துருகித்
துளித்துளியாய்ப் பெருகி
வெளிப்பட்டதைக் கண்டு
என்ன நடந்ததோ
ஏது நடந்ததோ
எதற்கு நடந்ததோ?
ஏனோ, பாவம் இந்நிலை
எனப் பலரையும்
அனுதாபப்பட வைக்கிறது
அப்பெண்ணின்
அழுகை.
*

Tuesday 10 May 2016

வெட்கம்...!! ( கவிதை )

வெட்கம்…!!
*
என்னைக் கண்டதும் எப்படி வந்ததோ?
அவள் முகத்தில் பூவின் வெட்கம்.
*
நெஞ்சில் சிறைப்பட்ட கனவுகள்
கல்லில் வடித்தான் சிற்பி.
*
பணம் கொடுக்கிறது வாங்குகிறது
வங்கிகளில் இயந்திரங்கள்.
*
மகிழ்ச்சி கிளையில் சிரிக்கும் இலைகள்
துக்கம் தரையில் உதிர்ந்த இலைகள்.
*
சோக அலை விற்பனைக்கில்லை
மோக வலை அமோக விலை.
*
இலவசம் பெறுவது அவமானம்
பெறாமல் இருப்பதே தன்மானம்.
*


Monday 9 May 2016

தாமரைப்பூ...!! ( ஹைக்கூ

Haiku – Tamil / English.
*
தன்  நிழலை  நீரில்
தானே  பார்க்கிகிறது
தாமரைப் பூ.
*
His shadow in the water
Sees Himself
Lotus flower.

*

Sunday 8 May 2016

முரண்...!! ( கவிதை )


*
சலித்துப் போகிறான் சூரியன்.
காற்றில் உதிர்ந்தன இலைகள்.
அதிர்ந்து ஒலிக்காத முரசு.
தாமரைப் பூக்காத குளம்.
வண்டு புழுத்த மாம்பழம்.
உடைந்துப் போன பம்பரம்.
முற்றாத கதிர்மணிகள்.
பழுதான டி.வி
ஏற முடியாத ஏணி
வீதியை பெருக்காத துடைப்பம்.
என்னய்யா இது?
ஒத்த வரியிலே முரண்.
கண்டு பிடித்து யோசிப்பது தான்
உங்கள் அறிவுத் திறன்.

*

Saturday 7 May 2016

கருணைக் கொலை...!!


*
நான்
உன்னைக் காதலித்தாலும்
நீ என்னைக் காதலித்தாலும்
உயிருக்கு
உத்தரவாதமில்லை.
இப்பொழுது
இளம்பருவத்தினர்
இளமையுணர்வுகள்
இரக்கமற்றவர்களால்
கருணைக் கொலையாகும்
பரிதாப ஆடுகள்
போலாகி விட்டது
காதல்.
ந.க.துறைவன்.

*

Wednesday 4 May 2016

நத்தைகள்...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
ஆற்றில் வாழும்
நத்தைகளுக்கு தெரியும்?
மணலை பற்றிய அறிவு.
*
Live in river
Slugs knows?
Knowledge of sand.

*

Tuesday 3 May 2016

இலவசமே...பரவசமே...!! ( கவிதை )


*
இலவசமாம் இலவசம்
அரசு தரும் இலவசம்
இன்பத் தமிழ் மக்கள் எல்லாம்
சுகமாய் வாழ்ந்திட இலவசம்.

அரிசி பருப்பு கோதுமை
அடக்க விலையில் இலவசம்
சீமைஎண்ணெய் பாமாயில்
நியாய விலையில் இலவசம்.

உணவகத்தில் இட்லி தோசை
குறைந்த விலையில் இலவசம்
தூயக் குடிநீர்ப் பாட்டில்
சலுகை விலையில் இலவசம்.

.
பொங்கல்விழா கொண்டாடிடப்
புடவை வேட்டி இலவசம்
ரொக்கப் பணம் பொங்கப் பொருட்கள்
பொங்கலுக்கு இலவசம்.

பள்ளிப் பிள்ளைகள் படிப்பதற்கு
பாடப் புத்தகம் இலவசம்
ஜாமின்டிரி பாக்ஸ் பென்சில்கள்
காலணிப் பைகள்  இலவசம்

கல்வி கட்டணம் இலவசம்
மிதி வண்டி இலவசம்
மடிக் கணினி இலவசம்
மாணவர்கள் முகத்தில் பரவசம்.

ஏழைப் பெண்கள் குடும்பம் நடத்த
ஸ்ட்வ் அடு்ப்பு இலவசம்
மிக்ஸி கிரைண்டர் இலவசம்
படுக்கும்போது காற்று வாங்க
மின்விசிறி இலவசம்
   
மக்கள் முகத்தில் புன்முறுவல்
பூத்திருக்கு பாராடா!
இலவசத்தில் இன்பமாக
இருக்குதடா தமிழகம்…!!.

*

Monday 2 May 2016

யாருக்குப் பிடிக்கணும்? ( கவிதை )


*                                        
உன்னை
என் பெற்றோர்களுக்குப் பிடித்திருந்தது
பார்த்து சம்மதம் சொல்ல அழைத்து வந்தார்கள்.
நான் உன்னைப் பார்த்தேன்
நீ என்னைப் பார்த்தாய்.
மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா? என்று
உன்னிடம்
உன் அம்மாவும் என் அம்மாவும்
இரகசியமாய் கேட்டார்கள்.
என் சம்மதம் கேட்காமலேயே
எப்படி நீ ஒற்றை வார்த்தையில்
பிடித்திருக்கிறது என்று சொன்னாய்?
அம்மாக்களுக்குப் பிடிப்பதைப்
பிள்ளைகள் தலையில் கட்டுகிறார்கள்
பிள்ளைகளுக்குப் பிடிப்பதை
அம்மாக்கள் மறுக்கிறார்கள்.

*                                          

நுங்கு...!! ( ஹைக்கூ )

Haiku – Tamil / English.
*
வெயிலில் மூதாட்டி
இலை போர்த்திய கூடை
உள்ளே குளிர் நுங்குகள்.
 *
Godmother in the sun
Leaf-covered basket
In cold jelly vettin.

Sunday 1 May 2016

பொறுப்பு...!! ( கவிதை )


*
இன்று விடிந்ததிலிருந்தே
வெளுத்தப்படியே இருக்கிறது
மேகங்களற்ற வெப்ப வானம்.
இன்று விடிந்ததிலிருந்தே
தகிக்கும் வெப்பம்
மனிதர்களையும் பறவைகளையும்
வெளியில் போக வேண்டாமென
அச்சுறுத்துகிறது சூரியக்கதிர் வீச்சுக்கள்.
இன்று விடிந்ததிலிருந்தே
எத்தனை டிகிரி கொதிக்கும் அனலோ?
எந்தத் திசைவழியாயும் சென்றும்
திரும்புகின்றது வெப்பக் காற்று.
இப்பவே இப்படியென்றால்,
இன்னும் கத்திரித் தொடங்கினால்
எப்படி அனல் பறக்குமோ?
வெயில் என்றாலே மனிதர்களுக்கு
நெஞ்சில் எழுகின்றது வெறுப்பு
நெருப்பு.
அதுவும் இந்த அவலநிலைக்கு
எந்தக் கோடைக் காலத்திற்கும் – அந்த
ஆதவனே முழு பொறுப்பு.
*