*
நான்
உன்னைக் காதலித்தாலும்
நீ என்னைக் காதலித்தாலும்
உயிருக்கு
உத்தரவாதமில்லை.
இப்பொழுது
இளம்பருவத்தினர்
இளமையுணர்வுகள்
இரக்கமற்றவர்களால்
கருணைக் கொலையாகும்
பரிதாப ஆடுகள்
போலாகி விட்டது
காதல்.
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment