நீண்ட
காலமாக தாமதமாகி வரும் 78.2% ,IDA இணைப்பு BSNL ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சினையாகும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதும், தற்போதைய பாஜக ஆட்சி பதவியேற்ற நாளிலிருந்தும் பேசி
வருகின்ற பிரச்சினையாகும். இப்பிரச்சினையினை நிறைவேற்றி தருவதாக ஒப்புதல் அளித்துள்ள
அரசு இன்னும் அதிகாரிகள் மட்டத்தில் கோப்பு மேசைக்கு மேசை தாவிக் கொண்டிருக்கிறதே தவிர
பிரச்சினை முடிந்தபாடில்லை. பாஜக அரசு இரண்டு ஆண்டுகள் முடித்து செய்த சாதனைகள் பற்றி
பேசத் துவங்கியுள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்கள் பொருளாதார ரீதியாக குடும்பத்தில் எத்தனையே
சூழ்நிலைகளைச் சமாளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். மூத்தக்குடிமக்களான அவர்களின்
உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு, இப்பிரச்சினையினை கால தாமதப்படுத்தாமல் அரசு நிறைவேற்றி
தருமா? என்று ஆவலோடு ஊழியர்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
என்.கணேசன்.
No comments:
Post a Comment