*.
கோடைக்
கால வெப்ப நிலை கொதிப்பு ஏறுது
தக்காளி
போல் சிவந்த மேனி தத்தளிக்குது!
மல்லிகைப்பூ
கூந்தலிலே அழகு காட்டுது
சுட்டெரிக்கும்
வெயிலிலே சிரிக்க மறுக்குது!
நெற்றிக்
கன்னம் கண்களிலே சோர்வுத் தெரியுது.
முலாம்பழம்
முகத்தினிலே வியர்வை வழியுது
வெள்ளரிப்
பிஞ்சாய் தளிர்கரங்கள் துவண்டிருக்குது
வெள்ளமாக
அரும்பி வியர்வை வழிந்து ஓடுது.
.
அவசரமாய்
பஸ் பிடிச்சி போகப் பார்க்குறே
ஜன
நெரிசல் புழுக்கத்திலே மூச்சுத் திணறுது.
.
,இறங்கி
நடந்து போகையிலே அசதி தெரியுது
ஆண்கள்
பார்க்கும் பார்வையிலே அனல் வீசுது.
.
ஆபிஸு
கேட்டிக்குள்ளே நுழைஞ்சி போகிறே
அழுது
வடிஞ்சி நிற்கிற முகங்கள் பார்க்குறே!
.
அப்பாடா
என்ன வெயில் என்று புலம்புறே?
ஆயாசம்
தீரும் மட்டும் தண்ணிக் குடிக்கிறே!!.
*
No comments:
Post a Comment