மரணத்தின் விளிம்பில் நின்று மன்றாடினார் அப்பா
எதையோ சொல்ல வந்தார், சொல்ல இயலவில்லை
சைகைக் கா†டினார், யாருக்கும் புரியவில்லை,
"போங்க,போய்ப் பாருங்க" என்றார் ஓரு பெரியவர்,
அருகிலிருந்தப் பாலை எடுத்து ஊற்றினார்கள்
பெண்கள், துளசி நீரை எடுத்து ஊற்றினார்கள்
உடன் பிறந்த சகோதரர்கள், காசை நீரில்
போ†டுக் கலக்கி ஊற்றினான் மைத்துனன்,
நிலத்து மண் நீரில் கரைத்துக் கொஞ்சம்
ஊற்றினான் மகன், கோயிலிருந்து வாங்கி
வந்த விபூதியை நெற்றியில் வைத்து வணங்கினாள்
மணைவி, எல்லாம் செய்தும் பிரியவில்லை உயிர்,
ஊசலா†டம், போரா†டம் அவரின் மனக் குறை
எதுவென்று எவருக்கும் தெரியாது, அவர்
கண் திறந்துப் பார்க்கவில்லை, ஓரு சொல்லும்
பேசவில்லை, கொஞ்ச நேரத்தில் உயிர் அடங்கிப்
போனது,
ஆன்மா வெளியேறியது
மரணித்தது உடல், என்றும்
மரணப்பதில்லைக் கடல்.