செடிகளைச் சிற்பங்களாக்கி
பூங்காவை அழகு படுத்தினான்
புல் செதுக்கும் மனிதன்.
தெளிந்த நீல வானம்
தாலாட்டும் அலைகள்
கடல் நீருக்குள் நிலா.
உடனே யாரும் எழுதுவதில்லை
இட்டுக் கட்டிப் பாடுவார்கள்
ஒப்பாரிப் பாட்டு,
எவ்வளவு தான் தாங்கும்
அலைகளின் மோதல் அடி
கரையில் நிற்கும் பாறைகள்.
பாதுகாப்பா யிருக்கிறது
காக்கைக் கூட்டில்
குயில் முட்டை,
No comments:
Post a Comment