எங்கிருந்தோ கேடகிறது இன்னியசை
தெருச் சண்டையில் நேர்முரணாய் கேடகிறது
யாரோ ஓருத்தியின் நாகூசும் வன்ம வசை.
தெருவில் போகிறது கிருத்திகை காவடிகள்
பக்தர்கள் பாடிக் களிக்கிறார்கள்
அண்ணாமலைச் சிந்துப் பாவடிகள்.
பார்வைக் குறைவென்றுப் போடடார் லென்ஸ்
பாதையில் நடந்த விபத்தின் போது
விரைந்து வந்தது 108 ஆம்புலென்ஸ்.
மழை வருவதற்கு ஏதேனுமுண்டோ? தடை
தீடீரென வந்து விடடால் நனையாமல்
காப்பதற்கு தேவையொரு சின்னக் குடை.
நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்
முயற்சியில்லாதவர்களின் கடும்
அவநம்பிக்கையே பெரும் சேதாரம்.
No comments:
Post a Comment