பாலியல் குற்றம்
பாலியல் குற்றம்
இரத்த நாளம் தூண்டிடும்
இன்ப வேடகைக் குற்றம்,
பார்வையிலே சுடடு விடும்
பருவ வயதுக் குற்றம் மனப்
பக்குவ மில்லாதவரின் இரு
பால் உணர்வுக் குற்றம்,
உடலைத் தேடி அலைந்திடும்
நாய்கள் புணர்ச்சிக் குற்றம்
விரைக்கும் ஆண்மை வெறியில்
திரைமறைவில் நடக்கும் குற்றம்
துடி துடிக்கப் புணர்ந்திடும்
துஷ்ட விலங்கின் குற்றம்
மலரைக் கசக்கி முகர்ந்திடும்
மன நோயாளியின் குற்றம்,
எத்தனைத் தண்டணை அளித்தாலும்
எத்தர்கள் மீறி செய்யும் குற்றம்
பெண்களைப் பாதுகாப்பதற்கு அரசு
என்ன சடடம் இயற்றும்?
No comments:
Post a Comment