கார்த்திகைப் பூக்கள்
கம்பளம் விரித்து வரவேற்பு
மரத்தின் கீழ் உதிந்த
பவழமல்லிப் பூக்கள்,
கோடை ஆரம்பம்
ஊருக்குத் திரும்பின
வெளி நாட்டுப் பறவைகள்,
பிறந்தன வளர்ந்தன வாழ்ந்தன
இறந்தன பிறந்தன மீண்டும்
உடலில் உயிர் செல்கள்,
காற்று இசைத்தது
குயில் பாடியது
நடனமாடின பூக்கள்,
எப்பொழுதும் விழித்திருக்கிறது
ஓதுங்குபவர்க்கு நிழல் தருகிறது
தூங்குமூஞ்சி மரங்கள்,
No comments:
Post a Comment