கிராமத்துச் சிறுவர்கள்
உற் சாகமாய் விளையாடுகிறார்கள்
பூவரசம் காய் பம்பரம்
அபசகுனமாய் நினைத்தனர்
சுபநிகழ்வின் போது
அணைந்தது குத்து விளக்கு,
மரணமடைந்தவர் அருகில்
ஓதுவார் பாடினார்
மனம் உருகத் தேவாரம்,
களவாடிப் போகிறார்கள்
மணல் கொள்ளையர்கள்
அழகழகான கூழாங்கற்கள்,
குழந்தைகளைச் சுமக்கிறது
விலங்கு பொம்மைகள்
பெரிய குடை ராட்டினம்,
நினைவாய் வைத்திருக்கிறார்கள்
ரகசியமா இன்னும்
கல்யாணப் பரிசுப் பொருள்,
No comments:
Post a Comment