புதுக் கவிதைகள்
இரகசியததிலும்
இ ரகசியமானது எது?
இரகசியத்தை
இரகசியமாய் வைத்திருப்பதின்
இரகசிய மென்ன?
அந்த இரகசியத்தை
அறிந்தவர் எவரோ?
பூவின் இரகசியம் தெரியு மென்று
பறந்து பறந்து எல்லோரிடமும்
சொல்லி இரகசியத்தை
உடைத்துப் போட்டது வண்டு,
தரையெங்கும்
சில்லறைகள் சிந்தியிருக்கும்
சிவந்தப் பூக்கள் உதிர்ந்திருக்கும்
உறவுகள் பின் தொடரும்
பிணத்தைச் சுமந்துப் பயணிக்கும்
பூந்தேர்
எத்தனை அழகானக் காட்சி
No comments:
Post a Comment