*
பூமியை தினந்தோறும் 24 மணி நேரம் சுற்றி
வருவதுடன் இரவு நேரங்களில் குளுமையும், வெளிச்சத்தையும் பூமிக்கு தரும் நிலவு உருவானது
எப்படி? என்பதை ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியும், அதைப்போல அளவு கொண்ட மற்றொரு கோளும்
சுமார் 4.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதன் அடிப்படையில்
நிலவு உருவாக்கியிருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
*
பூமியுடன் மோதிய அந்தக் கோளுக்கு ‘ தியா
‘ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். ‘தியா மற்றும் பூமியின் கலவையால் நிலவு உருவாகியிருக்க
வேண்டும்.
தியா கோள் பூமியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக
இருக்கவேண்டும். 70 சதவீத முதல் 90 சதவீத தியா கோளின் மூலப்பொருள்களாலும், 10 முதல்
30 சதவீத பூமியின் மூலப்பொருள்களாலும் நிலவு உருவாகியிருக்க வேண்டும். எங்களின் அடுத்த
கட்ட முயற்சியாக நிலவில் தியா கோளின் மூலப்பொருள்கள் எவ்வளவு அடங்கியுள்யது? என்பதைக்
கண்டறிய உள்ளோம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
*
ஜெர்மனியிலுள்ள கோயட்டிங்கென் என்ற பல்கலைக்கழகத்தில்
டேனியல்ஹெர்வார்ட்ஸ் என்பவர் தலைமையிலான விஞ்ஞானிகள், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு
நிலவு உருவானது குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
*
ஆதாரம் ;- தினமணி – 07-06-2014 – நாளிதழ்.
*