*
மந்திரத்தால்
காய்த்த மாங்காய்,
*
இரும்பைப்
பொன்னாக்கிடும்
ரசவாதத்தால்
கிடைக்கும் பணம்,
*
மாயாஜாலத்தால்
கைக்குட்டைக்குள்ளிருந்து
சிறகு விரித்து
வெளியில் வந்திடும்
புறாக்கள்.
*
பெண்ணைப்
பெட்டிக்குள் பூட்டி
வெட்டிக் காட்டும்
அதிர்ச்சி ஜாலம்.
*
இதுவரை
நடந்தேறாத
கீரிப் பாம்பு சண்டை.
*
இதிலெல்லாம்
மனிதனுக்கு ஏதோவொரு
மயக்கமிருக்கிறது
அதனால் தான்
என்றென்றும்
மாயைப் பார்த்து
மயங்குகிறான்
மனிதன்…!!.
*
No comments:
Post a Comment