*
ஜீவராசிகளுக்கு
மனமிரங்கி
ஒய்வளிக்கிறது
இரவு.
*
சூரியன் சந்திரன்
அறிவார்களோ?
இரவின் இரகசியத்
தத்துவம்.
*
இரவில் எங்கே போய்
ஒளிந்துக் கொள்கிறது
பகலில் அலையும்
வண்ணத்துப்பூச்சிகள்.
*
பெண்களுக்காக பரிதாபப்
பட்டு
என்றும் இரக்கப்படுகிறது
இரவு.
*
இரவின் உயிர்த்
துளியே
புல்லின் நுனியில்
பனித்துளிகள்.
*
No comments:
Post a Comment