Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Sunday 31 December 2017

மனமற்ற...

மனமற்ற வெளியில்
எந்தச் செய்திகளும் அறியாது?
கடந்து போகிறது பறவை.


மனமற்ற நிலை


சிந்தனைகள்.

ஆன்டன் செக்கோவ்
சிந்தனைகள்.

மகிழ்ச்சியாக இருக்கும்போது
வெயிலா அல்லது குளிரா என்பதையெல்லாம் மனம் கவனிப்பதில்லை.
*
மனிதன் என்பவன்
அவனது நம்பிக்கையைப் பொறுத்தவன்.
*
ஞானம்... வயதினால் வருவதல்ல, கல்வி மற்றும் கற்றலின் மூலமாக வருவது.

தொகுப்பு: ந க துறைவன்.


ஆன்டன் செக்கோவ் சிந்தனை கள்


வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Saturday 30 December 2017

போய் வா...!!

2017 - ஆண்டு

மறப்பதற்கும்
மறக்காமல்
இருப்பதற்குமான
ஏராளமான செய்திகள்
நம்மிடையே
விட்டுச் செல்கிறது
விடை கொடுப்போம்.

பை...பை...

ந க துறைவன்.


விடை தருவோம்.


Sunday 24 December 2017

Thursday 21 December 2017

நெய்யும் உண்மையும்!

சூஃபி கதை.

நெய்யும் உண்மையும்!

உழைப்பிற்கு எப்போதும் மதிப்பு கிடைக்கும். உழைத்து வாழ்ந்தால்தான் உண்மையான மகிழ்ச்சி கிட்டும் என்று உழைப்பின் பெருமையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார் சூஃபி என்கிற ஞானி.
அங்கிருந்த மூன்று இளைஞர்கள் அதற்கு மாறாக, உழைத்தால் அதற்கானப் பலனை எதிர்ப்பார்க்க வேண்டும். எனவே உழைக்காமல் இருப்பது சிறந்தது என நினைத்தனர். எவரையும் உணர்ந்து கொண்டு அவருக்கு அறிவுரை வழங்குவார் சூஃபி.
இந்த மூன்று இளைஞர்களின உணர்வையும் உணர்ந்து கொண்ட ஞானி, அவர்களை, சந்தைக்கு அழைத்து சென்றார்.
அங்கு ஒரு கடைக்குச் சென்று, " பால் எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்"என்றார் ஞானி.
காலையில் கறந்தால் மதியத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும் என்றார் கடைக்காரர்.
"இந்த நெய் எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்" என்றார் ஞானி.
ஒரு மாதம் என்றார் கடைக்காரர்.
" பால் என்ன விலை, நெய் என்ன விலை" என்றார் ஞானி.
" பால் பத்து ரூபாய், நெய் நூற்றைம்பது ரூபாய்" என்றார் கடைக்காரர்.
இந்த நெய்யை எவ்வாறு தயாரிக்கிறீர்கள் என்றார் ஞானி.
பாலைக் காய்ச்சி தயிராக்கி அதைக் கடைந்து வெண்ணெய் எடுத்து அதைக் காய்ச்சியே இந்த நெய் தயாரிக்கப்படுகிறது என்றார் கடைக்காரர்.
பின் ஞானி இளைஞர்களைப் பார்த்து, " நீங்கள் உழைக்காமல் இருந்தால் பாலின் கதிதான், கடும் உழைப்பு இருந்தால் நெய்யின் மதிப்பு கிடைக்கும்" என்றார் ஞானி.
இதைக் கேட்ட அந்த மூன்று இளைஞர்களும், இனி உழைத்து வாழ்வது என்று முடிவெடுத்தார்கள்.

ஆதாரம்: சூஃபி கதைகள் -எடையூர் சிவமதி - பக்கம் -2,3.
தகவல்: ந க துறைவன்.


சூஃபி கதை.


Wednesday 20 December 2017

பலூன்...!!

ஹைக்கூ

காற்றடைத்தப் பலூன்
வானில் மிதக்கிறது, என்
மூச்சுக் காற்று உள்ளே வெளியே.

ந க துறைவன்.


காற்றில் மிதக்கும் பலூன்.


Tuesday 19 December 2017

அரூப புத்தன்...!!

ஹைக்கூ

போதி சுள்ளிகள் தீமூட்டம்
எரிகிறான் அரூப புத்தன்
குளிர் காய்கிறார்கள் கூட்டமாய்...

ந க துறைவன்.


மார்கழி குளிர்.....


Sunday 17 December 2017

நிழல்...!!

நிழல்.

இன்னும் யாருக்கும்
தெரியவில்லை
அவளுக்கு மட்டும்
தெரிந்தது, அது
என்னுள்
புதைந்திருக்கும்
வெளி ரகசியம்.
+
வெட்டி எரித்தார்கள்
சாம்பல் கனன்று உணர்வாய்
எழுகிறது காதல் தீ.
+
வேப்பம் மரங்கள்
வெளியில் நிழல் தரும்
அம்மாவின்
நிழல் என்றும்
அகத்திற்கு
சுகம் தரும்
கற்பக விருட்சம்.
+
மேகங்கள் பயணம் தொலைதூரம்
ஊர் கடந்து போகின்றன
சொட்டு மழைத்துளிகள்
பெய்யாமல்...
+
வெட்டவெளியெங்கும்
பசுமை நிறைந்த மரங்கள்
பறவைகள் பறத்தல்
அகமனதில் பேரிசைச்சல்.
+
கவிதைகளில்
காதல் வாடை
குளிரும் போர்வையும்
பாராட்டு வாடை
காற்று நெகிழ்ந்தது.

ந க துறைவன்.


கவிதைகள்


Saturday 16 December 2017

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு இழந்து
கூடை நிறைய பூக்கள்
உள்ளே நெளிகிறது ஓர்புழு.

ந க துறைவன்.


பூக்கள் பற்றிய கவிதை


லிங்கப்பனி...!!

மார்கழி கவிதை


Friday 15 December 2017

நகைச்சுவை

வாசித்ததில் வசீகரித்தது.

மனைவியைத் திருடிச் செல்ல ஆள் தேவை.
இப்படியொரு நகைச்சுவையா என ஆச்சரியப் பட வைத்தது வைக்கம் முகம்மது பஷீர், இச்சிறுகதை.

" குரு, என் வீட்டுக்கு சமையல்காரனாக வருகிறீர்களா?
குரு, ஏதோ முக்கிய விஷயம் தான்."
"என்ன லாபம்?"
" என் மனைவியைத் திருடிச் செல்லலாம்."
இந்த நகைச்சுவை வரிகள் படித்து கதையை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். முழுவதும் படித்து சிரித்து மகிழுங்கள்.

ஆதாரம்: வைக்கம் முகம்மது பஷீர் - அனல் ஹக் - சிறுகதை தொகுப்பு - பக்கம் - 211.
தகவல்: ந க துறைவன்.
* Dec 16, 2017 12:21:50 PM


பஷீர் சிறுகதை


மார்கழி

மார்கழி

விடியல் பனிப் பொழிவு
நீராடும் குருவிகள்
வீதியில் திருப்பாவை ஓசை.

ந க துறைவன்.


மார்கழி பனி மாதம்


Wednesday 13 December 2017

சில கணங்களில்...!!

சில கணங்களில்...
+
மௌனமாய் இருந்தவளை
உசுப்பி விட்டு போனான்
கணவன்
அவள்
சிணுங்கல
சிறிது நேரத்தில்
மறைந்தது.
+
புருவங்கள் மத்தியில்
ஸ்டிக்கர் பொட்டாய்
நெற்றியில்
வைத்திருக்கிறாள்
என்னை
நினைவு கூர்ந்து...
+
வேகமாக கதவைச்
சாத்தினாள்
எதற்கு என்று
பார்த்தேன்
தெருவைக்
கடந்து போகிறான்
எதிர் வீட்டு வாலிபன்.
+
நிதானமாக
பாதையில் நடந்தாள்
வேகமாய்
ஸ்கூட்டரில் வந்தவன்
இடித்து விட்டு
போகிறான்.
+
கவுச்சி வாடை
அடிக்கிறது
மீன்காரியின்
பேச்சு.

ந க துறைவன்.


குறுங்கவிதைகள்.


Tuesday 12 December 2017

கனிந்த சாறு...!!

கனிந்த சாறு.

1.
சுரக்கும் தேன்
உமிழ்நீர்
கனிந்த சாறு
போதை என்று
கூறு.
2.
வண்ணத்துப்பூச்சிகள்
வழி தவறி
போவதில்லை
மனிதன் தான்
பல நேரங்களில்
வழி தவறி
போகின்றான்.
3.
சோர்வோடு சூரியன்
சாய்கிறான் மேற்கில்
மாலை
மஞ்சள் வெயில்
அழகு.
4.
எங்கிருந்தோ
தூண்டுதல் வருகிறது
இங்கிருப்பவர்கள்
ஆடுகிறார்கள்.
5.
அவரவர்கள்
நமச்சலை
அவரவர்களே
சொறிந்து
கொள்கிறார்கள்.

ந க துறைவன்.


குறுங்கவிதைகள்.


Friday 8 December 2017

பதிவுகள்...!!

தத்துபித்து
*
பதிவுகள்.

மண்ணின் நிறம்
நிரந்தரமானது
அடிக்கடி
மாறக்கூடியது
மனதின் நிறம்.
+
இக்கணம்
புத்த நிலையில்
இருக்கிறது மனம்.
+
காலப் பதிவுகள்
மறைக்கப் படுகின்றன
புதிய பதிவுகள் திருத்தப்படுகின்றன.
+
என்னை எப்போதும்
வசப்படுத்தி வைக்கிறாள்
இசை.
+
பனிக்குளிரில் பூச்செடிகள்
போர்வையில் மனிதர்கள்
கார்த்திகை குளிர்.

ந க துறைவன்.


பதிவுகள்


Thursday 7 December 2017

சாயல்...!!

சாயல்

யாருடைய சாயல்
நான்
அம்மா அப்பா
தாத்தா பாட்டி என 
வேறு
யாருடைய சாயல்
பிறந்த நாள் தொடங்கி
இன்று நாள் வரை
சாயல்
அடையாளம் வைத்து தான்
என்னை ஊர் ஜனங்கள்
ஊர்ஜிதப்பபடுத்தி
உறவாடுகிறார்கள்
சாயல் மரபணுக்கள்
சார்ந்தது என்றாலும்
யாருடைய சாயல் என்று
எனக்கு இன்னும்
புலப்படவில்லை...
கடைசியாக
இறந்த போது பெரியப்பா
சொன்னார்.
" டேய், நீ உன் பாட்டி
முகச் சாயலை அப்படியே
கொண்டிருக்கேன்னு..."

ந க துறைவன்.


யாருடைய சாயல்...


Wednesday 6 December 2017

பார்த்தும் பாராமல்...!!

பார்த்தாள்
பார்த்த பின்
பார்க்காதது போல்
பாதையில் நடந்தாள்
தலைகுனிந்து சிரித்து...!!

ந க துறைவன்.


பாதையில் நடந்தவள்


Tuesday 5 December 2017

இருப்பு

இருப்பு

இருப்பது...
இருக்கிறது இங்கே...
இருக்கும் எங்கும்...

இருப்பது இருப்பாக...
இருக்கிறது இக்கணம்...
இருக்கும் என்றுமாய்...

ந க துறைவன்.
+


இருப்பதால் இருப்பு


விண்ணோக்கி...

Haiku - Tamil / English

சிறுவன் ஊதினான்
விண்ணில் பறந்தது
நுரைப் பூக்கள்.

He flew in the sky
Boy blew
foam flowers.


விண்ணோக்கி...


Monday 4 December 2017

புல்வெளி...!!

புல்வெளி

புல்வெளியில்
காதலர்கள் சிரிப்பு
புரிதலற்ற பேச்சுக்கள்
புரியாமல் தவிக்கும்
குருவிகள்
வேடிக்கை பார்க்கும்
வண்ணத்துப்பூச்சிகள்
வெட்கத்தில் தலை குனிந்தாள்
வேறு பக்கத்தில் அவனை பார்த்தான்
வேர்கடலை விற்பவன்
புன்னகையோடு
நகர்கிறான் மெல்ல...

ந க துறைவன்.


பூங்காவில் காதலர்கள்


அன்பு...

அன்பு அனுபவித்தல்.


ஏகாந்த மௌனம்...!!

ஏகாந்த மௌனம்.

ஈரப்பதமான இரவின்
குளிர்ந்தக் காற்று வீசுகிறது
மெல்லிய புன்னகையில்
ஆழ்ந்த உணர்வுகள்
கண்களால் பரிபாஷையில்
பகிர்ந்து கொள்கின்றன.
அங்கே நிலவுவதோ
ஏகாந்த மௌனம்.

ந க துறைவன்.


ஏகாந்த மௌனம்...


செகண்ட் ஹாண்ட்...!!

செகண்ட் ஹாண்ட்.

" சமீபத்தில் உங்களோட திருமணம் நடந்தது இல்லையா? "
"ஆமா" 
" அந்தப் பொண்ணை ஏற்கனவே
தெரியுமா?"
" தெரியாது"
" அவ எழுதிய நிறைய காதல் கடிதங்கள்
ஒரு ஆள்கிட்ட இருக்கு."
" காதல் கடித வியாபாரியாக இருக்கும்!.
எதுவாக இருந்தாலும், அந்த விஷயத்தை சாரதா ஏற்கனவே எங்கிட்ட சொல்லிட்டா".
" திருமணத்து முன்னால குழந்தை
பெத்த விவரம்?"
"எல்லாம் தான்."
" தானொரு செகண்ட் ஹாண்டுங்குறதைச் சொல்லிட்டா இல்லையா?" 
லட்சியக் கவிஞன் சிரித்தான்.
கோபிநாதன் புன்சிரிப்புடன்.
" அதையும் சொன்னாள்" என்று சொல்லி விட்டு, "அவளை இந்த 
நிலைமைக்கு ஆளாக்கிய கவிஞனோட
பெயரையும் சொன்னாள்" என்றான்.

ஆதாரம்: வைக்கம் முகம்மது பஷீர் - அனல் ஹக் -   
சிறுகதை தொகுப்பிலிருந்து - பக்கம்- 32-33.
தகவல்: ந க துறைவன்.
*


சிறுகதையிலிருந்து...


செகண்ட் ஹாணாட்...!!

செகண்ட் ஹாண்ட்.

" சமீபத்தில் உங்களோட திருமணம் நடந்தது இல்லையா? "
"ஆமா" 
" அந்தப் பொண்ணை ஏற்கனவே
தெரியுமா?"
" தெரியாது"
" அவ எழுதிய நிறைய காதல் கடிதங்கள்
ஒரு ஆள்கிட்ட இருக்கு."
" காதல் கடித வியாபாரியாக இருக்கும்!.
எதுவாக இருந்தாலும், அந்த விஷயத்தை சாரதா ஏற்கனவே எங்கிட்ட சொல்லிட்டா".
" திருமணத்து முன்னால குழந்தை
பெத்த விவரம்?"
"எல்லாம் தான்."
" தானொரு செகண்ட் ஹாண்டுங்குறதைச் சொல்லிட்டா இல்லையா?" 
லட்சியக் கவிஞன் சிரித்தான்.
கோபிநாதன் புன்சிரிப்புடன்.
" அதையும் சொன்னாள்" என்று சொல்லி விட்டு, "அவளை இந்த 
நிலைமைக்கு ஆளாக்கிய கவிஞனோட
பெயரையும் சொன்னாள்" என்றான்.

ஆதாரம்: வைக்கம் முகம்மது பஷீர் - அனல் ஹக் -   
சிறுகதை தொகுப்பிலிருந்து - பக்கம்- 32-33.
தகவல்: ந க துறைவன்.
*


சிறுகதையிலிருந்து...


அங்கே சிரிப்பவர்கள்...?

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்?


Sunday 3 December 2017

அந்நியன்

அந்நியன்.

நானே
உங்களுக்கு
அந்நியன்
நீங்களே
உங்களுக்கு
அந்நியர்கள்


அந்நியமாதல்...


Friday 1 December 2017

மனம்

மனம்

நல்ல மனம் என்றும், கெட்ட மனம் என்றும் இரண்டு மனங்களில்லை. மனம் ஒன்றே.

பகவான் ஶ்ரீரமண மகரிஷி.


மனம்


வாழ்த்துக்கள்

கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே...

ந க துறைவன்.


Tuesday 28 November 2017

சரவண பொய்கை.

சரவண பொய்கையில்
பூத்திருக்கும் தாமரைகள்
அறியுமோ?
கார்த்திகை பெண்கள்
அழகின் ரகசியம்.

ந க துறைவன்.
*


அழகின் ரகசியம்.


Monday 27 November 2017

விருந்தினர்.

விருந்துக்கு வந்தவர்
சாப்பிடாமல் போனார்
காத்திருக்கப்
பொறுமையில்லாமல்...

ந க துறைவன்.


விருந்துக்கு வந்தவர்


Sunday 26 November 2017

சிந்தனைக்கு...

ஓஷோவின் சிந்தனை


பூக்கள்

பூக்கள்

சம்பங்கிப்பூ
ஆண்மைப்பூ
மல்லிகை
பெண்மைப்பூ
அல்லிப்பூ
அலிப்பூ.

ந க துறைவன்.


கல்யாணி

கல்யாணி.

கல்யாணி
எனக்கு பிடிக்ககும்
கவிதைக்கு
அவள்
அழகியல்
இசையில்
ராகத்திற்கு
கல்யாணி
அவளே என்
காதலி.

ந க துறைவன்.


கல்யாணி...


Saturday 25 November 2017

இடைவெளி

இடைவெளி.

எங்குமொரு
இடைவெளி இருக்கிறது
இடைவெளியில்லாமல்
நிகழ்கால இடைவெளி...

ந க துறைவன்.


இடைவெளி


Thursday 23 November 2017

பூஜ்யம்...!!

பூஜ்யம்.

ஒரு முறை ரமண மகரிஷியிடம் ஆட்டோகிராப் புத்தகத்தில் கையெழுத்துக் கேட்டபோது அவர் தாளில் மையப் பகுதியில் ஒரு புள்ளி வைத்து,அதனருகில், " விந்துவில் அனைத்தும் அமைந்துள்ளன. நானும் அதில் கலந்திருக்கிறேன். எனவே தனியாகக் கையெழுத்திட வேண்டிய அவசியமல்லை" என்று எழுதினார்.
ஆதாரம்: ஓஷோவின் நூல் - குரு - பாகம் - 2.
பக்கம் - 163.
தகவல்: ந க துறைவன்.


பூஜ்யம்.


யார் வந்தது...?

யார் வந்தது...?

வீடு தேடி வந்தது
பட்டாம்பூச்சி
நான் ஊரில் இல்லை
விசாரித்து விட்டு பறந்தது
மீண்டும்
பார்க்க வருவதாகச் சொல்லி
காத்திருக்கிறேன்
எப்போது வருமென்று...??

ந க துறைவன்.


Monday 20 November 2017

நிழலில்...!!

அருமையான போட்டோகிராபி.


தீபம்

தீபம்
சுடர்ந்தால் பிறப்பு
அணைந்தால் இறப்பு.

ந க துறைவன்.


தீபம்.


கூச்சல்...!! ( கவிதை )



1.
கூச்சல் கேட்டதும்
கூட்டம் சேர்ந்தது
கூச்சல் நின்றதும்
கூட்டம் கலைந்தது
2.
கூச்சல் இல்லை
விளக்கு வெளிச்சம் இல்லை
அமைதியாய் இருக்கிறது தெரு.
3.
கூச்சல்
தெருவுக்கு வந்து
நாறுகிறது
4.
கூச்சல் போட்டவன்
தந்திரசாலி
கூச்சல் போடாதவனும்
தந்திரசாலி
இருவருமே
ஏமாற்றும் புத்திசாலிகள்.
5.
கூச்சல் அதிகம்
கூட்டம் இல்லை
கூட்டம் சேர்ந்தது
கூச்சல் அதிகம்
கூட்டமோ
கூட்டம் கூட்டம்
கூச்சலோ கூச்சல்
கூச்சல்.

ந.க. துறைவன். 

Saturday 18 November 2017

அழகன்

கார்த்திகை பெண்கள்
அறுவர்
முலை உண்டான்
ஒரு முகமான
ஆறுமுகன்.

ந க துறைவன்.


கார்த்திகை திருவிழா மாதம்


Thursday 16 November 2017

Life

Life...


பலூன்...! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.


விண்ணை தொடும் ஆசை
வேடிக்கை பார்க்கும் பறவைகள்.
பலூன்கள் பறக்க விடும் குழந்தைகள்.

The desire to touch the sky
Funny birds watching.
Children who fly balloons.


N G T huraivan,

Monday 13 November 2017

அடிவாரம்...!! ( ஹைக்கூ )



Haiku – Tamil / English.

மலை அருகில் நிலா
அடிவாரத்தில் கீழ்
நானும் நிழலும்…

The mountain near the moon
Under the foot
I shadows ...

N G Thuraivan. 

Sunday 12 November 2017

தூங்காமல் தூங்கி...!! ( கவிதை )




தூங்குவது போன்று பாசாங்கு
தூங்கவில்லை
தூங்க முயற்சிக்கிறாள்
தூக்கம் வரவில்லை
தூக்கம் வர என்னென்னவோ
நினைக்கிறாள்
தூக்கம் வரவில்லை
நினைப்பதும் தூக்கத்திற்கு
தடையென நினைப்பை
நிறுத்துகிறாள்
தூக்கம் வரவில்லை
அருகில் துணையில்லை
அன்பு காட்ட குழந்தையில்லை
தனிமையில் விக்ரதி
தூக்கம் வரவில்லை
நினைப்பின் ஊடே
எப்பொழுது தூங்கினாளோ
அவளுக்கே தெரியாது?
தூங்காமல்
தூங்கிக் கொண்டு இருக்கிறாள்
சட்டென வெளியில் சத்தம்
பதறி எழுந்து போகிறாள்
கதவைத் திறக்க
மெல்ல திறந்தாள் அதிர்ந்தாள்
வெளியில் யாருமில்லை
எவரின் சுவடுமில்லை
வாடைக் காற்று உள்ளே நுழைந்தது
எவராயிருக்கும் இப்படி செய்தது?
கேள்விக்குள்ளொரு பிரமை.
ந.க. துறைவன்.


Saturday 11 November 2017

நூல் அறிமுகம்.




தலைப்பு  : கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளில்
            வடிவமும் உள்ளடக்கமும்.

ஆசிரியர் : முனைவர். இரமேஷ்

வெளியீடு : அன்பு நிலையம்
            11, புண்ணியகோட்டி நகர்,
            சலவன்பேட்டை, 
            வேலூர் – 632 001.
பக்கம்   : 304

விலை  : ரூபாய். 300/-

         - இலக்கியம், மதம், திராவிட அரசியல் ஆகிய முப்பரிமாணத்தின் மீது அமர்ந்து கோலோச்சிய படைப்பாளி கவிக்கோ அப்துல் ரகுமான். அவருடைய முழு படைப்பும் வியந்தும், நயந்தும், மிகுந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளைக் கவிக்கோ வாசக ரசிகர்கள் கொண்டாடப்படலாம். ஆய்வாளர்கள் முரண்படலாம்.

ஆய்வாளர் முனைவர் ம. ரமேஷ் – க்கு எனது பாராட்டுக்கள்
நல்வாழ்த்துக்கள்.


ந.க. துறைவன். 

முடிவு அல்ல...!!

ஹைக்கூ

பாதையற்ற பாதையில்
சலிக்காத எறும்புகளின்
தொடர் பயணம் முடிவல்ல...

ந க துறைவன்.
*


தொடர் பயணம்...


Thursday 9 November 2017

Monday 6 November 2017

அதிசயங்கள்...!!

Wonder / அதிசயம்.

நீலவானப் போர்வைப்
பூமிக்கு அதிசயம்
பாதையற்ற பாதையில் பயணிக்கும் மேகங்கள் அதிசயம்
நட்சத்திரக் கோலங்கள் அதிசயம்
வட்ட நிலா பேசாமல் போவது அதிசயம்
நீளவாக்கில் கம்பிகளாய்
பொழிகின்ற மழைத்துளிகள்
அதிசயம்
பசுமையான மரங்கள்
விசிறி விடுதல் அதிசயம்
வயல்வெளி நாற்றுகள்
நடனமிடுதல் அதிசயம்
மூங்கில் காட்டில் இசைக்கும்
பாடல் ராகம் அதிசயம்
மலைமுகட்டில் தனித்திருக்கும்
ஓற்றை மரத் தனிமை அதிசயம்
என் வீட்டின் சாரளத்தில் குடியிருக்கும் சிட்டுக்குருவி அதிசயம்
காதலுக்கு கண்ணசைத்து பச்சைக்கொடி காட்டிய காதலி அதிசயம்
பிரபஞ்சததில் நிகழ்வன எல்லாமே அதிசயம்
மனித வாழ்க்கை அதிசயம்
மரணம் ஒருநாள் வரும் நிச்சயம்.

ந க துறைவன்.







வாழ்க்கை அதிசயங்கள்


Saturday 4 November 2017

விட்டில்கள் கொண்டாட்டம்...!! ( கவிதை )




இருள் சூழ்ந்த நேரம்
மரங்கள் அசையவில்லை
ஈரக்குளிர்
மின்விளக்குகள் எரிந்தாலும்
கருமை படர்ந்த வெளிச்சம்
மழைத்துளிகள் சொட்டுகின்றன
விட்டில்கள்
தெரு மின்விளக்கைச்
சுற்றிச் சுற்றி விளையாடுகின்றன
பாதசாரிகள் யாரும்
அந்த விளையாட்டைப் பார்த்து
களிக்கவில்லை
ஆனந்த உற்சாகத்தில்
காமும் அன்பும் பரஸ்பரம்
பகிர்ந்து மகிழ்கின்ற காட்சி
இரகசியம் போல. நிகழ்கிறது
அக்கணத்தில்
விட்டில்கள் அம்பலத்தில்
பேரின்ப வாழ்க்கையைத்
திருவிழா கொண்டாடுகின்றன!!

ந.க. துறைவன். 

Friday 3 November 2017

விமர்சனம்...!! ( கவிதைகள் )




1.
நதியை விமர்சிக்காதே
ஓடக்காரனை விமர்சிக்காதே
மழையை விமர்சிக்காதே
ஆனால், இப் பெருவெளியை
விமர்சம் செய் எப்போதும்
ஏற்கும் இயற்கை.
2.
விமர்சனத்தைப் பார்த்து
ஏன் எரிச்சல் படுகிறார்கள்?
நெஞ்சைத் தைக்கிறது
நெருஞ்சி முள்.
3.
பட்டாம்பூச்சியின் காதலை
எல்லோரும் விமர்சிக்கிறார்கள்
ஆனால், தினந்தினம்
புதியதாய் மலர்கிறது காதல்.
4.
ஆத்திகனைப் பேச வைக்கிறான்
நாத்திகனைப் பேச வைக்கிறான்
எல்லோர் விமர்சனத்தையும்
உவந்து ஏற்கிறான்
வேலை வெட்டி இல்லாத
சமத்துவ சிவன்.
5.
யாரையும் நீ விமர்சிக்காதே
உன்னையே நீ விமர்சித்துக் கொள்
அன்றே நின்று கொல்லும் மனசாட்சி.
6.
விமர்சனம் செய்யாதே
சிவனே என்று சும்மாயிரு.
7.
கடவுளை விமர்சனம் செய்
கோபப்பட மாட்டார்
மனிதனை…???
8.
தேவலோகத்தின்
அரசியல் கலக
விமர்சகர் நாரதர்.
9.
கவிதையை, கவிஞனை
விமர்சிக்காதே
வெறுக்கப்படுவாய்
விலகப்படுவாய் நீ..நீ..!!
ந.க. துறைவன்.


Tuesday 31 October 2017

வெறுமை...!! ( ஹைக்கூ )



எல்லாமே வெறும் சொற்கள்
கவிதையில் ஒன்றுமில்லை
உள் மௌனம்.

Everything is just words
There is nothing in the poem
Inner silence.


N G Thuraivan.

கருவறை

கல்லில் வடிக்கப்பட்டுள்ள கருவறை.


துளிகள்

துளி துளியாய்...


Sunday 29 October 2017

அகவெளி...!! ( ஹைக்கூ )



Haiku / ஹைக்கூ.

ஹைக்கூ கவிதை அல்ல
செயலற்ற இருப்பின்
அகவெளி.

The Haiku poetry Is not
the intellect of the
Inactive existence.


N G Thuraivan.

வெட்கச் சிரிப்பு.

நினைவு மறந்த சந்திப்பு.


Tuesday 24 October 2017

கந்து வட்டி...வட்டி...!! ( துணுக்கு )



வட்டி       தீ
     யில்
கருகிய குடும்பம்.
*
வட்டிக் கடைகள்
தானே
வங்கிகள்.
*
வட்டிக்கி வாங்கி
ஆட்டோ வாங்கினான்
பொண்டாட்டிக்கு
அட்டிகை கூட
வாங்க முடியவில்லை.
*
குடும்பங்களை
வாட்டி
வதைக்கிறது
கந்து வட்டி.
*
அரசு சாரா தொழிலாக
இயங்கிக் கொண்டிருக்கிறது
மறைமுகமாய்
தனிநபர்கள்
வட்டித் தொழில்.
ந.க. துறைவன்.

*

Monday 23 October 2017

சஞ்சலமாய்...!!

சஞ்சலமாய் மனம்.


முருகன் விழா...!! ( கவிதை )



           
1.
பரவசமான பக்தர்களின்
உற்சாக மனக்களிப்பு
வள்ளிமலை சமணர்
குகை அருகில்
உடைந்த டாஸ்மாக்
பாட்டில்கள்.
2.
எப்போதோ காணாமல்
போய் விட்டதாய் புகார்?
அசுரர்களின்
ஆணவம் அடக்கிய
முருகன் கையிலிருந்தத்
தங்க வேல்.
3.
திருப்பரங்குன்றத்தில் ஒருத்தி
தணிகைமலையில் ஒருத்தி
தனித்தனி குடும்பமாய்
அங்கும் இங்கும் அலைந்தான்
மயில் வாகனத்தில் முருகன்.
4
கவலை நீங்க
கந்த சஷ்டி கவசம்
படித்தாள்
தேர் திருவிழாவில்
தொலைந்து போனது
அவள் கழுத்து
வைர நெக்லஸ்.
5..
சரவணப் பொய்கையைத்
தேடுகிறார்கள்.
பூமிக்கு வந்த
கார்த்திகைப் பெண்கள்.
6..
அண்ணன் தம்பி
இருவரும் இன்னும்
ஒன்று சேரவில்லை
ஞானப்பழம போட்டியில்
தோற்ற முருகன்.
ந.க. துறைவன்

*

Saturday 21 October 2017

முருகன் விழா...!! ( கவிதை )



1.
வள்ளியைக் கலப்பு
திருமணம் செய்துக் கொண்டு
ஊர் திரும்பினான் முருகன்.
2.
அடையாளம்
அற்று இருக்கிறது
குறமகளின் வள்ளிமலை.
திணைப்புனம்.
3.
சேவலும் மயிலும் சண்டை
போடாமல் இருக்கிறது
முருகன் கைகளில்…
4.
போர் முடித்து திரும்பிய
முருகன் சினம் தணிந்து
தணிகை மலையில்
மனைவியரோடு அமைதியாய்…!!
5.
வள்ளியை மணந்த பின்
இளங்குமரன் ஆனான்
கிழவன் முருகன்.

ந.க. துறைவன்.

சிறகொடிந்து...!! ( ஹைக்கூ )

Thursday 19 October 2017

ஏறும்புகள் / Ants...!! ( கவிதை )



1.
எது பாதையென்று தெரியாது
எப்படியோ வளைந்து நெளிந்து
பயணிக்கின்றன எறும்புகள்?

You do not know what is the path
Somehow bent
Traveling ants?
2.
க்யூ வரிசை அமைப்பு
எறும்புகளிடம் இருந்து
கற்றானா மனிதன்.
Que Line layout
From ants
Learned man.
*
3.
முதல் உணவு தானிய
சேமி்ப்பு கிடங்கு.
எறும்புகள் கற்றுக் கொடுத்த
அறிவு தானோ?
First grain cereal
Savings Warehouse.
Ants taught
Do you have knowledge?
*
4.
விரைந்து போகும்
எறும்பினை பிடிக்க
முயற்சிக்கிறது குழந்தை.
Hurry up
Catch an ant
Trying the baby.
*
5.
சர்க்கரை நோய் இல்லை
இனிப்பு கண்டவுடன்
மொய்க்கும் எறும்புகளுக்கு…!!
Diabetes does not exist
Seeing the sweetness
For the ant
*
6.
எந்த ரூபத்திலும்
எந்த கணத்திலும் நேரும்
எறும்புகளுக்கு மரணம்.
In any form
In any moment
The death of the ants.
N.G. Thuraivan.

*

Wednesday 18 October 2017

சுர சுரா கம்பி மத்தாப்பு...!1 ( கவிதை )




1.
வெடியோசையில்
உள்ளடங்கியது
மாப்பிள்ளை – பொண்ணு
அறையில்
சிரிப்பு சத்தம்
2.
தலை தீபாவளி
சீர்வரிசைக்கு
GST வரி கேட்டார்
புதுமாப்பிள்ளை.
3.
நாக்கைக் குத்தியது
தீபாவளிக்கு செய்த
முள்ளு முறுக்கு.
4.
மௌன உழைப்பு
வெடித்து சிதறுகிறது
தீபாவளி வெடிகளாய்…!
5.
அதிரசம்
முறுக்கு
எள்ளடை
தீபாவளி
முப் பலகாரம்.
ந.க. துறைவன்.

*