1.
பரவசமான பக்தர்களின்
உற்சாக மனக்களிப்பு
வள்ளிமலை சமணர்
குகை அருகில்
உடைந்த டாஸ்மாக்
பாட்டில்கள்.
2.
எப்போதோ காணாமல்
போய் விட்டதாய்
புகார்?
அசுரர்களின்
ஆணவம் அடக்கிய
முருகன் கையிலிருந்தத்
தங்க வேல்.
3.
திருப்பரங்குன்றத்தில்
ஒருத்தி
தணிகைமலையில் ஒருத்தி
தனித்தனி குடும்பமாய்
அங்கும் இங்கும்
அலைந்தான்
மயில் வாகனத்தில்
முருகன்.
4
கவலை நீங்க
கந்த சஷ்டி கவசம்
படித்தாள்
தேர் திருவிழாவில்
தொலைந்து போனது
அவள் கழுத்து
வைர நெக்லஸ்.
5..
சரவணப் பொய்கையைத்
தேடுகிறார்கள்.
பூமிக்கு வந்த
கார்த்திகைப் பெண்கள்.
6..
அண்ணன் தம்பி
இருவரும் இன்னும்
ஒன்று சேரவில்லை
ஞானப்பழம போட்டியில்
தோற்ற முருகன்.
ந.க. துறைவன்
*
No comments:
Post a Comment