1.
வள்ளியைக் கலப்பு
திருமணம் செய்துக்
கொண்டு
ஊர் திரும்பினான்
முருகன்.
2.
அடையாளம்
அற்று இருக்கிறது
குறமகளின் வள்ளிமலை.
திணைப்புனம்.
3.
சேவலும் மயிலும்
சண்டை
போடாமல் இருக்கிறது
முருகன் கைகளில்…
4.
போர் முடித்து
திரும்பிய
முருகன் சினம்
தணிந்து
தணிகை மலையில்
மனைவியரோடு அமைதியாய்…!!
5.
வள்ளியை மணந்த
பின்
இளங்குமரன் ஆனான்
கிழவன் முருகன்.
ந.க. துறைவன்.
No comments:
Post a Comment