*
1.
முரண்பாடுகளின்
ஊடே தான்
வாழ்க்கை
முன்னேற்றமே
நிகழ்கிறது.
2.
பேசுவது ஒன்று
செய்வது ஒன்று
முரண்பாடானது
மனிதம்.
3.
உனக்குள் நான்
வெளியில்
தெரியாத
அரூப உருவம்.
4.
சாணம்
திருநீரானது
நெற்றியில்
மூவரி ஹைக்கூ…
நண்பனின்
கிண்டல்
வரிகள்.
5.
காதலியைக்
கைவிட்டு
காதலியின்
தோழியைத்
திருமணம்
செய்து கொண்டான்
பிழைக்கத்
தெரிந்தவன்.
6.
பிரிந்தவளுக்குத்
தான்
தெரியும்
துயரம்
இணைந்தவளுக்குத்
தான்
தெரியும்
மகிழ்ச்சி.
7.
GO GO
என்று
சொன்னாலும்
போகாது
E
G
O
8.
வீண் விவாதம்
வீம்பு
விவாதம்
இஃதொரு
வாதநோய்.
9.
பேச்சில் தேன்
இனிக்கும்
வார்த்தைகள்
தேள் கொட்டும்
10.
வெற்றிக்குப்
பின்னால்
தோல்வி
தொடர்ந்து
வருகிறது.
ந.க. துறைவன்.
No comments:
Post a Comment