புதிய ஹைக்கூ
நூல் அறிமுகம்.
தலைப்பு : பெயர்
தெரியாப் பூ.
ஆசிரியர் :
கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி
வெளியீடு ; கந்தகப்பூக்கள்.
120, குட்டியணைஞ்சான் தெரு,
சிவகாசி – 626 123. தமிழ்நாடு.
இந்தியா.
செல் : + 91 98435 77110.
பக்கம் : 48.
விலை ரூ.40/-
ஹைக்கூ
நூற்றாண்டு விழா முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இச்சிறு நூலில், மகாகவி பாரதியாரின் “ ஜப்பானிய கவிதை ”
16-10-1916 – ல் வெளிவந்தக் கட்டுரை இடம்
பெற்றுள்ளது சிறப்பு அம்சம். தன்னைச் சுற்றி நிகழும் சமகாலச் சம்பவங்களைப்
பார்த்து அனுபவித்ததை ஹைக்கூவாக்கி காட்டியுள்ளார் ஸ்ரீபதி.
1.
எப்போதும்
களவாடப்படுகிறது
கரைக்குள்
முடங்கியோடும்
நதி.
2.
மினரல்
வாட்டர் பாட்டிகளுடன்
தீவிரமாக
ஆலோசனை செய்யப்பட்டது
நதிநீர்ப்
பங்கீடு.
3.
லாரி ஏறி
செத்தது
நதி.
*
அரைநூற்றாண்டுகளுக்கும்
மேலாகத் தொடரும் நதிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு எந்தவொரு அரசும் முனைப்புக்
காட்டவில்லை. பேசியே காலந்தாழ்த்தி வருகிறரா்கள். இங்கே நதிகள் பாழ்பட்டு
வருகின்றன. இந்நிலையினைச் சுட்டிகிறது
மேற்கண்ட
நதிகள் ஹைக்கூ கவிதைகள்.
நண்பர். கந்தகப்பூக்கள்
ஸ்ரீபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
நன்றி.
ந.க. துறைவன்.
வேலூர் – 632 009.
செல் ;
9442234822 / 8903905822.
தேதி ;
13-10-2017.
.
No comments:
Post a Comment