எழுத நினைத்த
கதை உருவான
கரு கலைந்தது.
ந.க. துறைவன்.
நல்ல கவிதையில் என்ன இருக்கும்?
கெட்ட கவிதையில் என்ன இருக்கும்?
எல்லாவற்றிலும் கூச்சப்பட்டு எழுத்து வரிகள் இருக்கும்.
ந. க. துறைவன்.
மகன், மருமகள், மாமியார்கள் தொடர்ந்து மகள்களாலும் முதியோர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இக்குடும்ப உறவுகளின் வன்கொடுமைகளுக்கு சமூகம் என்ன தீர்வு காணப்போகிறது?
ந. க. துறைவன்.
ரசம்
நன்றாக இருக்கிறது
என்று மனைவியைப்
பாராட்டினான்.
அருகில் இருந்த
அக்காவின் முகம்
சுருங்கி வாடியது.
ந. க. துறைவன்.
புல்வெளி :
எங்கோ நினைவு?
எல்லா வேலைகளும்
நன்றாகவே நடந்தது
ஒன்றை தவிர
பூ வாங்க
மறந்து போனாள்?
ந. க. துறைவன்.